Featured Home (TOP)

Recent Comments

Monday, May 11, 2015

Unknown

தேர்தல் சீர்திருத்தம் குறித்து இணக்கம் இல்லாவிட்டால் பாராளுமன்றம் கலைப்பு: மைத்திரி


தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பில் கட்சிகளிடையே பொது இணக்­கப்­பாடு காணமுடி­யா­விட்டால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் ­தேர்­தலை நடத்­து­வ­தற்­கான இறுதித் தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுத்­துள்ளார் என்று ஜே.வி.பி. தெரி­வித்­தது.
தேர்தல் சீர்திருத்தம் குறித்து இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருக்கின்றது. இதனையடுத்து நாளை மறுதினம் 13 ஆம் திகதி தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான யோச­னைகள் அமைச்­ச­ர­வைக்கு முன்­வைக்­கப்­ப­டு­மென்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.
இங்கு உரை­யாற்­றிய ஜே.வி.பி.யின் தலை­வரும் எம்.பி. யுமான அநுரகுமார திஸா­நா­யக, இந்த அர­சாங்கம் சிறு­பான்மை பலம் கொண்ட அர­சாங்கம். அது 100 நாள் வேலை திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக உறுதி மொழியை வழங்­கி­யது. அதற்­காக நிறை­வேற்றுச் சபையும் அமைக்­கப்­பட்­டது.
இவ்­வா­றா­னதோர் நிலையில் நிறை­வேற்றுச் சபையில் நாம் அங்கம் வகித்தோம். 19 ஆவது திருத்­தத்தை ஏற்­ப­டுத்­தினோம். அதனை நிறை­வேற்ற ஆத­ரவு வழங்­கினோம். இன்று தகவல் அறியும் சட்ட மூலமே தயா­ராகி விட்­டது.
ஊழல் மோச­டிகள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான விசேட நிதிக் குற்­ற­வியல் பிரிவு செயற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஊழல் மோச­டிகள் தொடர்­பான பல குற்றச் சாட்­டுக்­களை லஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவில் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது. தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக யோச­னை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
இவ்­வாறு அரசு வழங்­கிய 100 நாள் உறுதி மொழியின் கால அவ­காசம் முடிந்து விட்­டது. நிறை­வேற்றுச் சபை எதற்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டதோ அதன் கட­மை­களும் நிறை­வேற்­றப்­பட்டு விட்­டன. எனவே அது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கமே மேற்­கொள்ள வேண்டும்.
அர­சி­னதும் நிறை­வேற்று சபை­யி­னதும் காலம் முடி­வ­டைந்த நிலையில் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத்­தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். இந்த ஆட்­சியை நீடிப்­ப­தற்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் மக்கள் ஆணை கிடைக்­க­வில்லை. எனவே ஆட்­சியை நீடிப்­பது தார்­மீக விரோ­த­மாகும்.
2010 ஆம் ஆண்டு மக்கள் ஆணை வழங்­கிய பாரா­ளு­மன்­றமே தற்­போது உள்­ளது. அதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐ.தே. கட்­சியும் இணைந்து கூட்­டாட்சி நடத்­து­வ­தற்கும் மக்கள் ஆணை வழங்­க­வில்லை.
மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அவ­ரது அணியும் நாட்­டுக்­குள்ளும் பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் குழப்­ப­க­ர­மான நிலை­மையை ஏற்­ப­டுத்தி சீர்­கு­லை­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. எதிர்க்­கட்சித் தலைவர் யாரென்­பது தொடர்பில் இன்று வரை சபா­நா­யகர் இறுதித் தீர்­மா­னத்தை வழங்­க­வில்லை. இவ்­வாறு பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் வெளி­யிலும் பிரச்­சி­னைகள் தலை­தூக்­கி­யுள்­ளன.
அர­சியல் ஸ்திர­மில்­லாத நிலைமை ஏற்­பட்டு அரா­ஜக நிலை தோன்­றி­யுள்­ளது. எனவே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். நாம் எமது பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தலை­மையில் சனிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து விரி­வான பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம்.
மேற்­கண்ட விட­யங்­களை முன்­வைத்­த­தோடு தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பிலும் கலந்­தா­லோ­சித்தோம். விருப்பு வாக்கு முறை ஒழிக்­கப்­பட்டு விகி­தா­சார தேர்தல் முறை­மையை ஆத­ரிக்­கின்றோம் என்­ப­தையும் அதே­வேளை தேர்தல் முறைமை மாற்­றத்தை உட­ன­டி­யாக கொண்டு வந்து அமுல்­ப­டுத்த முடி­யாது என்­ப­த­னையும் ஜனா­தி­ப­திக்கும் தெளி­வு­ப­டுத்­தினோம். இதனை ஜனா­தி­ப­தியும் ஏற்­றுக்­கொண்டார்.
இன்றும், நாளையும் அனைத்து கட்­சி­க­ளு­டனும் இது தொடர்­பாக பேச்­சுக்­களை நடத்தி இறுதி முடிவு காணப்­பட்டு எதிர்­வரும் 13 ஆம் திகதி தேர்தல் முறை மாற்றம் தொடர்­பாக அமைச்­ச­ர­வைக்கு பத்­திரம் முன்­வைக்­கப்­ப­டு­மென்றும் பின்னர் அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­டு­மென்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.
அதே­வேளை தேர்தல் முறை மாற்றம் தொடர்­பாக பொது இணக்­கப்­பாட்டை காண முடியா விட்டால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தேர்தல் முறைமை மாற்றம் நிறைவேற்றப்படா விட்டாலும் பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்படுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார் என்றும் அநுர திஸாநாயக கூறினார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் ரி. லால்காந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Source - tamil leader 

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :