உணவு விஷமடைந்ததால் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீதவாக்கை கைத்தொழில் வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதிய உணவு உண்ட பின்னரே குறித்த ஊழியர்கள் சுகவீன மடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
