அக்குரணை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ்வின் 29 வது பட்டமளிப்பு விழா 13.06.2015
சனிக்கிழமை நாளை காலை 9.30 முதல் ஜாமிஅஹ் வளாகத்தில் வெகு விமரிசையாக
நடைபெறவுள்ளது.
அல்ஹாஜ் D.A.S.முஹம்மத் (தலைவர்.நிர்வாக சபை ) அவர்களின் தலைமையில்
இடம்பெறும் இவ் பட்டமளிப்பு விழாவில் தபால்துறை, முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கெளரவ M.H.A.ஹலீம்
பிரதம அதிதியாக கலந்துகொள்ளுவதுடன் அஷ்ஷேஹ் A.C.அகார் முஹம்மத் (நளீமி),
அஷ்ஷேஹ் M.H.M.யூசுப் முப்தீ (றஹ்மானி)அகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ் நிர்வாகம் அழைக்கிறது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
