Featured Home (TOP)

Recent Comments

Sunday, June 7, 2015

Unknown

வீதி எங்கும் குப்பை..! சிரமத்திற்கு முகம் கொடுக்கும் காத்தான்குடி மக்கள் ..


(ஜுனைட். எம்.பஹ்த் )

கடந்த இருவாரங்களாக காத்தான்குடி நகரசபையினர் விரைவில் உக்கும் குப்பைகளை மாத்திரம் சேகரித்து வருவதோடு ஏனைய குப்பைகளை எடுக்க மறுத்து வருவதால் காத்தான்குடி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது..


வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இரவு நேரங்களில் வீதிகளிலும் பொதுஇடங்களிலும் மக்கள் வீசிவருவதனால் பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் சுகாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர் . 

அத்தோடு வீதியில் கொட்டப்படும் குப்பைகளையும் விலங்கின் அழுகிய பாகங்களையும் பறவைகள் எடுத்துச்சென்று வீட்டு கிணறுகளில் போடுவதால் நீர் அசுத்தமாவதுடன் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.





உரிய அதிகாரிகள் இவ் விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.



(ஜுனைட். எம்.பஹ்த் )

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :