Featured Home (TOP)

Recent Comments

Tuesday, June 30, 2015

Unknown

மீண்டும் மஹிந்தவின் கைகளில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்


(ஆர்.யசி)

சர்­வா­தி­கார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் மஹிந்­தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்­சயம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எச்­ச­ரித்­துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியினர் முட்­டாள்­க­ளாக செயற்­படக்கூடாது எனவும் அவர் தெரி­வித்தார் ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஏற்­பட்­டி­ருக்கும் பிர­த­ம­ர் வேட்பாளருக்கான போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறு­கையில்,
கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இந்த நாடு பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளது. பயங்­க­ர­வாத யுத்­தத்தை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டது, அதேபோல் சர்­வ­தேச அழுத்­தங்­களை எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அதேபோல் சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­களின் கடும்­போக்கு அர­சி­ய­லுக்கும் நாடு முகம் கொடுத்­தது. வெறு­மனே யுத்­தத்தை வெற்­றி­கொண்டு நாட்டை ஆயுத போராட்­டத்தில் விடு­வித்­த­தாக கூறிக்­கொண்டு மக்­களை ஏமாற்­றிய மஹிந்த கூட்­டணி நாட்டை அழிவின் பாதையில் கொண்டு சென்­று­விட்­டது.

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும் என்­பதில் நாமும் ஆவ­லோடு இருந்தோம். யுத்தம் நடத்­தப்­ப­டாது இடை­ந­டுவே புலி­க­ளுக்கு ஆத­ர­வாக அர­சாங்கம் செயற்­பட ஆரம்­பித்த போது ஜாதிக ஹெல உரு­மை­யவே தொடர்ந்து யுத்­தத்தை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டது. நாம் கொடுத்த அழுத்­தத்தின் கார­ணத்­தினால் தான் அர­சாங்கம் தொடர்ந்து யுத்­தத்தை முன்­னெ­டுத்­தது.

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நாட்டை மாற்றுப் பாதையில் கொண்டு செல்­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாக இருந்தும் முன்­னைய அர­சாங்­கத்தின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தமது அதி­கார ஆசையில் சர்­வா­தி­கார ஆட்­சியை கடு­மை­யாக்­கி­ய­மையும் நாட்டில் அதி­காரக் குவிப்பை மேற்­கொண்­ட­மை­யுமே நாம் மஹிந்­தவின் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற பிர­தா­னமான கார­ண­மாக அமைந்­தது.

கடந்த ஜன­வரி மாதம் இந்த நாட்டில் மிக முக்­கிய மாற்றம் ஒன்று ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை காலமும் சர்­வா­தி­கா­ர­மாக பய­ணித்த ஆட்சிப் பாதை கடந்த ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்­த­லுடன் ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகிய கட்­சிகள் பிர­தான கட்­சி­க­ளாக ஒன்­றி­ணைத்து ஏனைய தமிழ்,சிங்­கள, முஸ்லிம் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து இந்த ஆட்­சியை அமைத்­துள்ளோம்.

இந்த ஆட்­சியில் நாடு சரி­யான பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. ஆகவே இப்­போது நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­த­லுடன் மீண்டும் பல கட்சி அர­சியல் முறைமை உரு­வாக்கும் சர்­வா­தி­கா­ரப்­போக்கு இல்­லாத, அனைத்துக் கட்­சி­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்கும் வகையில் சரி­யா­ன­தொரு அர­சியல் முறைமை உரு­வாக வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

கேள்வி :- மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வது சாத்­தி­ய­மா­னதா ? ஏற்­றுக்­கொள்ளக் கூடி­யதா?

பதில்: மஹிந்­தவை மீண்டும் பிர­த­ம­ராக்க ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­டணி முயற்­சிக்க நினைப்­பது மிகவும் முட்டாள் தன­மா­ன­தொரு செயற்­பா­டாகும். இத்­தனை காலமும் நாம் போரா­டி­யதும் சர்­வா­தி­கார குடும்ப அர­சி­யலை அடி­யோடு ஒழிக்க வேண்டும் என்­ப­தற்­கா­க­வே­யாகும். அவ்­வா­றான நிலையில் மீண்டும் மஹிந்­தவை ஆத­ரித்­துக்­கொண்டு வர நினைப்­பது ஏன்? மீண்டும் மஹிந்த கூட்­ட­ணி­யிடம் நாட்டை ஒப்­ப­டைத்தால் நாடு அழி­வது உறுதி. அதேபோல் மஹிந்­தவால் இனிமேல் அர­சி­யலில் கால்­தடம் பதிக்க முடி­யாது. அவரால் மீண்டும் மக்­களின் ஆத­ரவை பெற­மு­டி­யாது. மஹிந்த மற்றும் அவ­ரது குடும்ப அர­சியல் வாதி­க­ளைப்­பற்றி மக்கள் நன்­றாக அறிந்­து­கொண்­டுள்ளார். அவ்வாறான நிலையில் மக்கள் மீண்டும் மஹிந்தவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கேள்வி :- பொதுத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமைய தனித்து போட்டியிடுமா?

பதில்: பொதுத் தேர்தலில் நாம் தனித்து களமிறங்குவதா அல்லது கூட்டணியில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் இல்லை. இவ்வார இறுதியில் நாம் கட்சி கூட்டத்தில் இறுதி முடிவை எடுப்போம்.
virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :