Featured Home (TOP)

Recent Comments

Thursday, July 30, 2015

Unknown

பயணப் பொதியினுள் இளம் பெண்ணின் சடலம் -புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் மீட்பு; விசாரணை தீவிரம்

புறக்­கோட்டை, பெஸ்­டியன் மாவத்­தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த பய­ணிகள் பொதி­யொன்­றுக்குள் இருந்து அரை நிர்­வா­ண­மான பெண்­ணொ­ரு­வரின் சடலம் நேற்று பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டது.


கைவி­டப்­பட்­டி­ருந்த குறித்த கறுப்பு நிறத்­தி­னா­லான பெரிய பொதி­யினை திறந்து பார்த்த புறக்­கோட்டை பஸ் தரிப்பு நிலை­யத்தின் நடை­பாதை வியா­பாரி ஒருவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வலின் பிர­காரம் குறித்த இடத்­துக்கு விரைந்த புறக்­கோட்டை பொலிஸார் இந்த சட­லத்தை நேற்றுக் காலை 9.30 மணி­ய­ளவில் மீட்­டனர்.

 30 வய­துக்கும் 42 வய­துக்கும் இடைப்­பட்ட பெண் ஒரு­வரே இவ்­வாறு அந்த பயணப் பொதிக்குள் மர்­ம­மாக உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­தா­கவும், சந்­தே­கத்­துக்கு இட­மான வெளிக் காயங்கள் அவ­ரது உட­லத்தில் காணப்­ப­டாத நிலையில் மூக்­கி­லி­ருந்து இரத்தம் வழிந்­த­மைக்­கான அடை­யாளம் மட்டும் இருந்­த­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

5 அடி 2 அங்­குலம் உயரம் கொண்ட  சட­ல­மாக காணப்­பட்ட குறித்த பெண்  அரை நிர்­வா­ண­மாக இருந்­த­தா­கவும், மேல் பகுதி இளம் நீலம் மற்றும் வெள்ளை கலந்த ரீ சேட் அணிந்­தி­ருந்­ததால் மறைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் கீழ் பகு­தியில் உள்­ளாடை மட்­டுமே இருந்­த­தா­கவும் அந்த பொலிஸ் அதி­காரி மேலும் குறிப்­பிட்டார்.

பெட்­டிக்குள் குறித்த பெண்­ணு­டை­யது என சந்­தே­கிக்­கத்­தக்க ஆடைகள் பலவும் இருந்­த­தா­கவும் சட­லத்­திலும் கழுத்­திலும், இடது கையிலும் தங்கச் சங்­கி­லிகள் இருந்­த­தா­கவும் காதில் கம்­மல்கள் இருக்­க­வில்லை எனவும்  கழுத்தில் இருந்த சங்­கி­லியில் பென்டன் ஒன்று இருந்­த­தா­கவும் அந்த பொலிஸ் அதி­காரி மேலும் குறிப்­பிட்டார்.

மூன்று அடி நீளமும் 2 அடி அக­லமும் ஒரு அடி உய­ரமும் கொண்ட கறுப்பு நிற பெட்­டி­யொன்­றி­லேயே இந்த சடலம் இருந்­த­தா­கவும் பொலிஸார் விசா­ர­ணை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர விடி­வெள்­ளிக்கு தெரி­வித்தார். 

குறித்த பெண் யார் என அடை­யாளம் காணப்­ப­டாத நிலையில் அவரை அடை­யாளம் காண உத­வு­மாறும் அவர் பொது மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

கறுப்பு நிற­மான அந்த பெட்­டி­யா­னது 15 ஆம் இலக்க கொழும்பு - அனு­ரா­த­புரம் தனியார் அரை சொகுசு மற்றும் சாதா­ரண கட்­டணம் அற­விடும் 31 ஆம் இலக்க பஸ் தரிப்­பி­டத்­தி­லேயே கைவி­டப்­பட்ட நிலையில் இருந்­துள்­ளது. 

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
 நேற்றுக் காலை புறக் கோட்டை பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை தொடர்­பு­கொண்­டுள்ள புறக் கோட்டை பஸ் தரிப்பு நிலை­யத்தின் நடை பாதை வியா­பா­ரி­யான செல்­லையா வீரப்பன் என்­பவர் கைவி­டப்­பட்ட பெட்­டி­யொன்­றுக்குள் சடலம் ஒன்று காணப்­ப­டு­வ­தாக தகவல் அளித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்தே காலை 9.30 மணி­ய­ளவில் ஸ்தலம் விரைந்த பொலிஸார் சட­லத்தை மீட்­டனர்.


எனினும் நேற்று மாலை வரை குறித்த சட­லத்தை அடை­யாளம் காண முடி­யாத நிலையில் கொழும்பு புதுக்­கடை 9 ஆம் இலக்க நீதிவான் திலின கம­கேயின் மஜிஸ்­திரேட் பரி­சோ­த­னையின் பின்னர் சட­ல­மா­னது பொலிஸ் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் தக­வல்­களின் படி இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறி­ய­மு­டி­வ­தா­வது,
 சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் கடந்த இரு வரு­டங்­க­ளாக சார­தி­யாக கட­மை­யாற்றி வந்த எம்.எம்.சி. மொஹிதீன் என்­பவர் தனது மனை­வி­யுடன் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் இருந்து தனது சொந்த ஊரான அனு­ர­த­பு­ரத்தை நோக்கிச் செல்ல புறக் கோட்டை பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்கு சொந்­த­மான  சொகுசு பஸ் ஒன்றில் வந்­துள்ளார். 

அந்த பஸ்ஸில் இருந்து இறங்­கி­யுள்ள அவர் தனது பயணப் பொதி­க­ளுடன் போக்­கு­வ­ரத்து சபை பஸ் தரிப்பு நிலை­யத்தில் இருந்து பெஸ்­டியன் மாவத்­தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு வந்­துள்ளார்.

இதன் போது அவ­ரது பொதி­களை தூக்கி வரு­வதில் சிர­மங்கள் இருக்­கவே சுமார் 48 வயது மதிக்­கத தக்க நபர் ஒருவர் அவ­ருக்கு அதனை சுமந்து செல்ல உத­வி­யுள்ளார்.

 குறித்த உதவி செய்த நபர் தானும் தம்­புள்­ளைக்கு செல்ல வேண்டும் என தெரி­வித்து சுமு­க­மா­கவே உரை­யாடி 15 ஆம் இலக்க பஸ் தரித்து நிற்கும் இடத்தை நோக்கி சென்­றுள்­ளனர்.

சுமை கார­ண­மாக பொதியை பிடித்­தி­ருந்த கையை எடுத்து மறு­கைக்கு மாற்ற மொஹிதீன் முனைந்த போது குறித்த நபர் அப்­பொ­தி­யுடன் அங்­கி­ருந்து பிறி­தொரு பஸ் வண்­டிக்குள் ஏறி மறைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து தனது பயணப் பொதியைத் தேடி மொஹிதீன் பஸ் தரிப்பு நிலையம் எங்கும் அலைந்­துள்ளார்.

இதன் போது அங்­கி­ருந்த நடை­பாதை வியா­பா­ரி­க­ளையும் அவர் வின­வி­யுள்ள நிலையில் அவர்­களும் அது தொடர்பில் தேடி­யுள்­ளனர்.

இதன்­போது 15 ஆம் இலக்க பாதையில் பய­ணிக்கும் கொழும்பு - அனு­ரா­த­புரம் பஸ் வண்டி தரிக்கும் இடத்தில் பிர­யா­ணிகள் வரி­சை­யாக இருக்க அங்கு கைவி­டப்­பட்ட கறுப்பு நிற பயணப் பொதி­யொன்று இருந்­துள்­ளது. மொஹி­தீனின் பயணப் பொதியைத் தேடியோர் அதுவா பொதி என கேட்ட போதும் மொஹிதீன் அது தனது பொதி­யல்ல என தெரி­வித்­துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பொதிக்கு எவரும் உரிமை கோராத நிலையில் அதனை  தண்ணீர் போத்­தல்­களை விற்­பனை செய்யும் நடை­பாதை வியா­ப­ரி­யொ­ருவர் திறந்­துள்ளார். இதன் போதே துணிகள், ஆடை­க­ளுக்கு மத்­தியில் மடித்து போடப்­பட்­டி­ருந்த சட­லத்தை அவர் கண்­டுள்ளார். இதன் பின்­ன­ரேயே விடயம் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர, கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட, கொழும்பு மத்­திக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த சிறி­வர்­தன ஆகி­யோரின் மேற்­பார்­வையில்  உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சஞ்­ஜீவ பண்­டா­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக புறக் கோட்டை பொலி­ஸாரும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவும் இணைந்து விரி­வான விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளனர்.

 சடலம் மீட்­கப்­பட்­டமை குறித்து அவ்­வி­டத்தில் இருந்த பலரின் வாக்கு மூலங்­களை பதிவு செய்­துள்ள பொலிஸார் புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்­தையும் அதற்கு அண்­மித்த பகு­தி­க­ளிலும் உள்ள சீ.சீ.ரீ.வி.கண்­கா­ணிப்பு கம­ராக்­க­ளையும் சோதனை செய்து வருகின்றனர்.

 வீட்டு வேலைக்காக வருகை தந்திருந்த ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இவ்வாறு பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கொலைக்கு முன்னர் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கும் பொலிஸார் முதலில் அப்பெண் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  

சடலம் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு மரண  விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசரணைகள் தொடர்கின்றன.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :