Featured Home (TOP)

Recent Comments

Friday, July 31, 2015

avathani Media Network

இஸ்மாயில் சட்டத்துக்கு முரணாக போட்டி - மேன் முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரீட் மனு தாக்கல்

திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்­டத்தில் இம்­முறை பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கு­ரிய சட்ட ரீதி­யான தகை­மையை தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக முன்னாள் உப­வேந்தர் கலா­நிதி எஸ்.எம்.எம். இஸ்­மாயில் கொண்­டி­ருக்­க­வில்லை எனக் குறிப்­பிட்டு நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரீட் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.


சம்­மாந்­து­றையைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.முஸ்­தபா என்­பவர் சார்பில் சட்­டத்­த­ரணி ஆனந்த குல­வன்­ச­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த மனுவில் தேர்தல் ஆணை­யாளர், தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக பதி­வாளர், கலா­நிதி எஸ்.எம்.எம்.இஸ்­மாயில், சட்­டமா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

அர­சியல் யாப்பின் படியும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் விதி­களின் படியும் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக முன்னாள் உப­வேந்தர் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான தகை­மையைக் கொண்­டி­ருக்­க­வில்லை எனும் வாதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கலா­நிதி எஸ்.எம்.எம். இஸ்­மாயில் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­ன­ராக தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­தி­ருக்க வேண்டும்.

அவ்­வா­றன்றி அவர் விடு­முறை எடுத்­து­விட்டே தேர்­தலில் போட்­டி­யி­டு­கிறார்.

இது சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும். அந்த வகையில் அவர் போட்­டி­யி­டு­வதை சட்­டத்­துக்கு முர­ணா­னது எனப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் அவர் தேர்­தலில் வெற்றி பெற்­றாலும் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்கு தகுதி பெற­மாட்டார் என்­பதைப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் இந்த மனுவில் மேலும் கோரப்­பட்­டுள்­ளது.

தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழக முன்னாள் உப­வேந்தர் கலா­நிதி எஸ்.எம்.எம்.இஸ்­மாயில் இம் முறை பொதுத் தேர்­தலில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்­பாக போட்­டி­யி­டு­கிறார்.

கடந்த திங்­கட்­கி­ழமை  சம்­மாந்­து­றையில் நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், முன்னாள் உப­வேந்தர் தேர்­தலில் வெற்­றி­யீட்­டி­னாலும் அவரால் சட்ட ரீதி­யாகப் பாரா­ளு­மன்றம் செல்ல முடியாது என்றும் அவர் பாராளுமன்றம் சென்றால் காதை அறுத்துத் தருவேன் என்றும் சவால் விட்டிருந்தார்.

இந் நிலையிலேயே நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :