பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோனினால் ஒழுங்கு விதிகள் அடங்கிய சுற்றறிக்கை, நேற்றைய தினம் அனைத்து அரச திணைக்களங்கள், அமைச்சுக்கள் மற்றும் காரியாலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அரச வாகனங்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகெப்டர்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு ஒழுங்கு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் தேர்தலுக்காக அரச வாகனங்களைப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் ஒரு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும்,
அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குதல், இடமாற்றம் வழங்குதல் மற்றும் பதவியுயர்வு வழங்குதல் நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையின் பிரகாரமே முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

