Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 18, 2015

Unknown

சௌபாக்கியமான எதிர்காலம் முஸ்லிம்களுக்கு பிறக்கட்டும்...! ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

நிலையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கி செல்கின்ற எமது தேசத்தில் இஸ்லாம் மதம் எவ்வாறு பங்களிக்கின்றது என்பதை ஈதுல் பிதுர் பண்டிகை எமக்கு நினைவூட்டுகின்றது.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலத் திற்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில்,அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இன்­றைய தினத்தில் ஈதுல் பிதுர் பண்­டி­கையை கொண்­டாடும் இலங்­கைவாழ் மற்றும் அனைத்­து­லக முஸ்லிம் மக்­க­ளு­கக்கும் எனது மன­மார்ந்த வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.
கடந்த மாத­மா­னது நோன்பு ஆன்­மீக மலர்ச்சி மற்றும் உதவி தேவைப்­பட்­டோ­ருக்கு உதவி புரியும் கால­மாக இருந்­தது. ஈதுல் பிதுர் பண்­டி­கையின் மூலம் பரி­சுத்தம் புனி­தத்­தன்மை மற்றும் ஆன்­மீக ரீதி­யான தூய்மை ஆகி­யவை மீளப்­பெற்றுக் கொள்­ளப்­ப­டு­வ­துடன் மனி­தா­பி­மான ரீதியில் எம்மை ஒற்­று­மைப்­ப­டுத்தும் விழு­மி­யங்­களும் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன.

உலக மதங்­களின் செழிப்­பு­மிக்க மர­பு­ரி­மையை இலங்கை அடைந்­தி­ருப்­பதால் நிலை­யான நல்­லி­ணக்­கத்­தையும் ஒற்­று­மை­யையும் நோக்கிச் செல்­கின்ற உமது தேசி­யத்தில் இஸ்லாம் மதம் எவ்­வாறு பங்­க­ளின்­னின்­றது என்­பதை ஈதுல் பித்ர் பண்­டிகை எமக்கு நினை­வூட்­டு­கின்­றது.

இன்ஷா அல்லாஹ், இலங்கை வாழ் முஸ்லிம் மக்­களின் மகிழ்ச்­சி­க­ர­மான ஈதுல் பிதுர் பண்­டி­கைக்கும் பாது­காப்­பு­மிக்க சௌபாக்கியமான எதிர்காலத்திற்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்

மைத்ரிபால சிறிசேன

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :