Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 18, 2015

Unknown

சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கொலையாளி ஒருவர் – கருணா குற்றச்சாட்டு:-

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கொலையாளி ஒருவர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டமையை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரே இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ வேட்பு மனு வழங்குமாறு கோரவில்லை எனவும், சுசில் பிரேமஜயந்தவின் சுய விருப்பின் அடிப்படையில் குறித்த கொலையாளிக்கு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் ஆகியோரின் கொலைகளுடன் இந்த நபருக்கு நேரடித் தொடர்பு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய வேட்பாளர் யார் அவர் எந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

globaltamilnews
 

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :