நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மற்றுமொரு மக்கள் சந்திப்பு நேற்று ஏறாவூரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), பிராந்திய தலைமைத்துவசபை உறுப்பினர் ASM.ஹில்மி உட்பட NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பலரும் ஏறாவூர் பிரதேச பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், பிர்தௌஸ் நளீமி மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த அப்துல் சலாம் ஆகியோர் உரையாற்றினார்கள்.