Featured Home (TOP)

Recent Comments

Friday, August 28, 2015

avathani Media Network

மைத்திரி,ரணில்,சந்திரிகா நீண்ட நேரம் கலந்துரையாடல்!

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ருக்கு இடையில் நேற்­று முன்தினமி­ரவு முக்­கிய சந்­திப்பு ஒன்று இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பின்னர் ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழல் குறித்தே இந்தச் சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
விசே­ட­மாக அமைச்­சர்கள் நிய­மனம், பத­வி­யேற்பு நிகழ்வு , மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான அமைச்­சுக்கள் ஒதுக்­கீடு குறித்து இந்தச் சந்­திப்பில் ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­வித்­தன.
பாரா­ளு­மன்றத் தேர்தல் முடிந்து 10 தினங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்பில் இழு­பறி நிலை ஏற்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் புதிய தேசிய அர­சாங்­கத்தில் 45 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையை அமைப்­பது என்றும், அதில் 30 அமைச்­சுக்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­ன­ருக்கும் 15 அமைச்சுப் பத­விகள் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ககு எவ்­வா­றான அமைச்சுப் பத­வி­களை வழங்­கு­வது என்­பது தொடர்பில் இதன்­போது ஆரா­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
எனினும், அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு அடுத்­த­மாதம் 2ஆம் திகதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இழுபறிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :