7 வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா எதிர் வரும் 10.09.2015 அன்று மாலை 3.00 மணிக்கு இலங்கை மன்ற கல்லூரி கேட்போர்க் கூடத்தில் நடைபெறும்.
இவ்விழாவில் கலாநிதி ஹரிஸ்சந்திர விஜயதுங்க சிறப்பு அதிதியாக் கலந்துக் கொள்வார்.
சிங்களத்திலான சிறப்புரையை பேராசிரியர் தயா அமரசேகர அவர்களும், தமிழிலான சிறப்புரையை தில்லை நடராஜா அவர்களும் ஆற்றுவார்கள்.
இவ்விழாவில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கள, தமிழ,; ஆங்கில, மொழிகளில் வெளிவந்த நாவல், சிறுகதை, கவிதை , சிறுவர் இலக்கியம், இளைஞர் இலக்கியம், சிங்கள-தமிழ் மொழிபெயர்ப்பு மற்று ம் வெளிவந்த நூல்களில் முதல் சிறந்த நூல், போன்ற வகையான நூல்களில் தெரிவுச் செய்யப்ட்ட நூல்களின் விபரம்;, அங்கு அறிவிக்கப்பட்டு பணப் பரிசில்களும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டும்.
மேலும் மும்மொழிகளில் நீண்ட காலமாக இலக்கியப் பணி ஆற்றிய மூவருக்கு கொடகே வாழ்நாள்; சாகித்திய விருதுகளும் வழங்கப்படும். அந்த வரிசையில் இம்முறையிலான கொடகே தேசிய சாகித்திய விழாவில் சிங்களம், தமிழ,; ஆங்கிலம் ஆகிய மொழிகள் மூலம் நீண்ட காலமாக இலக்கியப் பணி ஆற்றிய முறையே திரு சந்ததஸ் கோபர ஹேவா அவர்களுக்கும், திரு நந்தினி சேவியர் அவர்களுக்கும், திருமதி விஜிதா பெர்ணான்டோ ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.




