(ஏ.எல்.டீன் பைரூஸ்)
புதிய காத்தான்குடி அன்வர்நகர் பாலர் பாடசாலையின் 07 வது விளையாட்டு விழா 27.09.2015 ஞாயிற்று;கிழமை காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் பாலர் பாடசாலையுpன் தலைவர் எம்.எல்.ஏ.மொஹிதீன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் கலந்து சிறப்பித்தார்.
பாலர்பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பல்வேறுபட்ட அர்ப்பணிப்;புடனான சேவைகளை புரிந்து வரும் மேற்படி பாலர்பாடசாலையின் விளையாட்டு விழாவில் மானவர்களின் பல்வேறுபட்ட போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந்நிகழ்வினில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.டீ.எம்.மாஹிர், பெண்கள் வலுவுட்டலுக்கான அமைப்பின் பணிப்பாளர் சல்மா அமீர்ஹம்ஸா,கிராம சேவை உத்தியோகஸ்தர் ஏ.ஜீ.ஏ.றசாக்,புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் தலைவர எம்.எல்.ஆதம்பாவா உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிப்பதக்கம்,சாண்றிதழ், பர்சில்கள் என்பன அதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
மைதான ஒழுங்கினை பாலகர்களின் தோழன் லக்கி லாபிர் மெற் கொண்டதுடன் அறிவிப்பாளராக ஹைறாத் இளைஞர் கழகத்தின் தலைவர் எம்.எம்.நஸீம் அவர்கள் கலந்து கொண்டார்.