முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் 29 அரச அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவு இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சுமார் 80 மில்லியன் ரூபா அரசாங்கம் பணம் மஹிந் சிந்தன சஹ_ர்த்த சாஹனய என்ற திட்டத்துக்கு மாற்றப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் அடிப்படையில் குறித்த அரச அதிகாரிகளின் வங்கிக்கணக்குகள் பரிசீலிக்கப்படவுள்ளன.
இந்த பணத்தில் சுமார் 6 மில்லியன் ரூபாய்கள் ஒருக்கட்டத்தில் துறைமுக அதிகாரசபையில் இருந்து பெசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவின் உதவு நிறுவத்துக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
