Featured Home (TOP)

Recent Comments

Saturday, September 19, 2015

avathani Media Network

9 மாதங்களில் 10 சிறார்கள் கொலை; அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் கடந்த 9 மாதங்களில் 10 சிறார்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சிறார்கள் மற்றும் பெண்கள் என 795 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையின் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 9 மாதங்களில் சிறுவர்கள் கடுமையாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த 84 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலவத்துகொட, மாதிவல தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜயகொடி இதனை குறிப்பிட்டுள்ளார்.
2014ம் ஆண்டில் 27 சிறார்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கொடுமையாக நடத்தப்பட்டமை தொடர்பில் 197 சம்பவங்கள் நடந்துள்ளன.
அத்துடன் 2014ம் ஆண்டில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான ஆயிரத்து 680 சம்பவங்கள் நடத்துள்ளதாகவும் பிரியந்த ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :