காத்தான்குடி கடற்கரையில் ஏத்துக் கால் என்றழைக்கப்படும் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் நாளுக்கு நாள் கடல் உள்வாங்கப்பட்டு வருவதுடன் கரையோரமுள்ள கட்டிடங்களும் அழிந்து போகும் நிலைக்கு மாறி வருகிறது.
அதிகமானவர்கள் தங்களுடைய ஜீவனோபாய தொழிலாகக் கொண்டுள்ள மீன் பிடித் தொழிலுக்கும் இந்தக் கடலரிப்பு பாதிப்பை உண்டுபண்ணுவதாக கடற் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தக் கடலரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற் கொள்ளாவிட்டால் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மிக விரைவில் எழும்ப நேரிடும் எனும் அச்சமும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அரச அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
அரச அதிகாரிகளே இது உங்கள் கவனத்திற்கு...

1 comments:
Write commentsகடற்கரை அப்பாவின் கொடிக் கம்பத்தை முத்தமிடத்தான் கடல் முன்னேறி வருகிறதாக்கும்.
Reply