Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 22, 2015

avathani Media Network

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் "மாமறைக்கு ஒரு மாநாடு"

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ,அம்பாறை,திருகோணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் ஒரு இஸ்லாமிய மாநாடு ஒன்று எதிர்வரும் மாதம் 02-10-2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர்களான கோவை எஸ். அய்யூப் மனித குலத்திற்கு மாமறையின் அறைகூவல் எனும் தலைப்பிலும் ,ஏ.அன்சார் ஹ_சைன் (ஃபிர்தௌசி) மாமனிதரின் மனித நேய குரல் எனும் தலைப்பிலும் ,எஸ்.ஹாமீம் ஃபிர்தௌசி இஸ்லாமிய இனிய பண்புகள் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர்.

எனவே மேற்படி இஸ்லாமிய மாநாட்டில் 10000 பத்தாயிரம் ஆண்,பெண் சகோதர ,சகோதரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால்  அனைத்து இஸ்லாமிய சகோதர,சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.




avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :