அடைக்கலமே கொடுத்தேன் என்கிறார் அசாத் சாலி
தான் முஸ்லிம்களின் தலைவர் எனக் கூறிக் கொண்டு எனது மனைவியை அழைத்துச் சென்று சட்டவிரோதமான வாழ்க்கை நடாத்தும் அசாத்சாலி முழு முஸ்லிம் சமூகத்தையும் கேவலப்படுத்தியுள்ளார்.
தான் முஸ்லிம்களின் தலைவர் எனக் கூறிக் கொண்டு எனது மனைவியை அழைத்துச் சென்று சட்டவிரோதமான வாழ்க்கை நடாத்தும் அசாத்சாலி முழு முஸ்லிம் சமூகத்தையும் கேவலப்படுத்தியுள்ளார்.
நானும் எனது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டு துன்பப்படுவது போன்று வேறு எவரும் இதன் பிறகு அசாத்சாலியினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே எனது கதையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துகிறேன் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்தார்.
அசாத் சாலியின் நாவல வீட்டில் எனது மனைவி இருப்பதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்று வீட்டைச் சுற்றி வளைத்த எம்மை, அமைச்சு பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் விரட்டினார்கள்.
அசாத் சாலிக்கு ஆயுதமொன்றும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு அரசாங்கம் எவ்வாறு அமைச்சுப் பாதுகாப்பு பிரிவு மூலம் பாதுகாப்பு வழங்க முடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
மத்திய மாகாண சபையின் உறுப்பினர் எ.எல்.எம். உவைஸின் மனைவி ருஸ்தாவை (வயது 46) மத்திய மாகாண சபையின் உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி அழைத்துச் சென்று வாழ்க்கை நடாத்தி வருவதை விளக்கும் முகமாக உவைஸினால் பம்பலப்பிட்டி சிட்டி ஹோட்டலில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையிலே ஏ.எல்.எம்.உவைஸ் மேற்கொண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில் ‘எனது மனைவியை இந்தியாவுக்கும் அழைத்து சென்றுள்ளார். எனது மனைவி இருக்கும் இடத்தை இனங்காண முடியாமலிருந்ததால் ஏதும் நடவடிக்கை எடுக்க முடியாதிருந்தேன்.
இந்தியாவிலிருந்து கடந்த சனிக்கிழமையே இலங்கைக்கு வந்துள்ளார்.
எனது மனைவி சில தினங்களுக்கு முன்பு எனது மகனுக்கு தொலைபேசியினூடாக கதைத்துள்ளார்.
அதில் தான் அசாத் சாலியால் பலவந்தமாக கூட்டி வரப்பட்டிப்பதாகவும் வீட்டுக்கு வர வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். இரவு ஒரு மணிக்கு ஒரு புதிய தொலைபேசி இலக்கத்திலிருந்தே தொடர்பு கொண்டுள்ளார்.
அசாத்சாலியின் மனைவியும் மகளுமே எனது மனைவி அசாத்சாலியின் நாவல வீட்டில் இருப்பதாக எனக்கு அறிவித்தார்கள். இதனையடுத்தே நாம் நாவல வீட்டுக்குச் சென்றோம்.
அசாத் சாலி இதற்கு முன்பு பல திருமணங்கள் செய்துள்ளார். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரையும் திருமணம் செய்து விவாகரத்துச் செய்துள்ளார். இவர் பிரபல அரசியல்வாதிகளுடனிருந்து போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கு அரசியல் பலம் இருப்பதாக ஏமாற்றி வருகிறார்.
பெண்களை ஏமாற்றி கூட்டிச் சென்று ஹராமான வாழ்க்கை நடாத்தும் இவரது கேவலமான நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும்.
இவருக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்காமலிருந்ததற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி செலுத்த வேண்டும்.
அசாத் சாலியையும் எனது மனைவியையும் வெலிக்கடை பொலிஸுக்கு அழைத்து வந்து விசாரணை நடாத்துவதாக கூறிய பொலிஸார் எனது மனைவியை மாத்திரம் அழைத்து வந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அசாத்சாலி விசாரிக்கப்படவில்லை. இவருக்கு அரசியல் பின்புலத்தில் ஆதரவு இருப்பதாக தெரியவருகிறது.
மத்திய மாகாண சபை உறுப்பினராகவிருந்ததனால் கடந்த இரு வருடங்களாக எனக்கும் அசாத்சாலிக்கும் தொடர்பிருந்தது. எனது மனைவியும் அசாத்சாலியின் மனைவியும் இதன் மூலம் நண்பிகளானார்கள். இந்தக் காலத்திலே எனது மனைவிக்கும் அசாத்சாலிக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
என்னிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொள்ளாத எனது மனைவியுடன் அசாத் சாலி குடும்பம் நடாத்துவது இஸ்லாத்துக்கு முரணானதாகும். ஹராமாகும். சவுதியில் என்றால் இருவரும் சிரச்சேதம் செய்யப்படுவார்கள்.
தான் ஒரு சமூகத்தின் தலைவன் என்று கூறி கொண்டு இவ்வாறான கீழ்த்தனமான செயல்களில் ஈடுபடும் அவரை சமூகம் நிராகரிக்க வேண்டும்.
இவர் அரசியலுக்கே தேவையற்றவர். இதன் பிறகு அசாத்சாலியினால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். எமக்கு ஏதும் நடந்தால் அசாத்சாலியே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.
நாட்டு மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அசாத்சாலியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மேலும் பல ஊடக மாநாடுகளை நடாத்தி வெளிச்சத்துக்கு கொண்டு வரவுள்ளேன்.
ஒரு உண்மையான முஸ்லிம் செய்யும் வேலை அல்ல இது. இவரது இந்த மோசமான செயல்களை முடிவுக்கு கொண்டு வர சமூகம் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். உவைஸின் மகனும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். உவைஸின் மனைவிக்கும் அவருக்கும் இடையில் பல மாதங்களாக பிரச்சினை இருந்துள்ளது.
அவருடன் வாழ முடியாது என்று அவரது மனைவி கடிதமும் எழுதியுள்ளார்.
மனைவியை உவைஸ் லண்டனுக்கும் அழைத்துச் சென்று வைத்திருந்தார். அங்கும் சிறையில் போன்றே அடைத்து வைத்திருந்தார்கள்.
அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்தும் அவர்களது குடும்பப்பிரச்சினை தீரவில்லை.
தனது கணவனுடன் வாழமுடியாது தினமும் பிரச்சினை ஏற்படுகிறது என நுகேகொடை பொலிஸில் மகளிர் பிரிவில் முறைப்பாடும் செய்துள்ளார். இக்காலங்களில் இவர் தெஹிவளைப் பகுதியில் தனது உறவினர்கள் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
ஐந்து தினங்களுக்கு முன்பே உவைஸின் மனைவி அடைக்கலம் கோரி எனது நாவல வீட்டுக்கு வந்திருந்தார். நான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தேன். இதனையடுத்து உவைஸின் அடியாட்கள் எனது நாவல வீட்டினை சுற்றிவளைத்தார்கள். நான் உங்கள் முகத்தில் கூட விழிக்க விரும்பவில்லை என உவைஸின் மனைவி கூறிவிட்டார்.
அவரது மனைவியை 45 தினங்களாக நான் வைத்திருந்ததாகக் கூறுவதெல்லாம் பொய். அவர் எனது வீட்டுக்கு பணம் எடுத்து வரவில்லை. பொலிஸில் ஏற்கனவே முறைப்பாடு செய்து விட்டே வந்தார்.
எனக்கு அமைச்சு பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கிவருவது உண்மை. 2001ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பல்வேறு அச்சுறுத்தல்கள், கொலைப் பயமுறுத்தல்கள் இருப்பதனாலே இந்தப்பாதுகாப்பு வழங்கப்படுகிறது.உவைஸின் மனைவி விவகாரத்துக் கோரி கொழும்பு காதி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்.
இரண்டு விசாரணைகள் நடைபெற்றுள்ளன.
தான் எட்டு வருடங்களாக கணவருடன் தொடர்புகள் இல்லாமல் இருப்பதாக காதி நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் அசாத் சாலி கூறினார்.
அசாத் சாலியின் நாவல வீட்டில் எனது மனைவி இருப்பதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்று வீட்டைச் சுற்றி வளைத்த எம்மை, அமைச்சு பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் விரட்டினார்கள்.
அசாத் சாலிக்கு ஆயுதமொன்றும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு அரசாங்கம் எவ்வாறு அமைச்சுப் பாதுகாப்பு பிரிவு மூலம் பாதுகாப்பு வழங்க முடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
மத்திய மாகாண சபையின் உறுப்பினர் எ.எல்.எம். உவைஸின் மனைவி ருஸ்தாவை (வயது 46) மத்திய மாகாண சபையின் உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி அழைத்துச் சென்று வாழ்க்கை நடாத்தி வருவதை விளக்கும் முகமாக உவைஸினால் பம்பலப்பிட்டி சிட்டி ஹோட்டலில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையிலே ஏ.எல்.எம்.உவைஸ் மேற்கொண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில் ‘எனது மனைவியை இந்தியாவுக்கும் அழைத்து சென்றுள்ளார். எனது மனைவி இருக்கும் இடத்தை இனங்காண முடியாமலிருந்ததால் ஏதும் நடவடிக்கை எடுக்க முடியாதிருந்தேன்.
இந்தியாவிலிருந்து கடந்த சனிக்கிழமையே இலங்கைக்கு வந்துள்ளார்.
எனது மனைவி சில தினங்களுக்கு முன்பு எனது மகனுக்கு தொலைபேசியினூடாக கதைத்துள்ளார்.
அதில் தான் அசாத் சாலியால் பலவந்தமாக கூட்டி வரப்பட்டிப்பதாகவும் வீட்டுக்கு வர வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். இரவு ஒரு மணிக்கு ஒரு புதிய தொலைபேசி இலக்கத்திலிருந்தே தொடர்பு கொண்டுள்ளார்.
அசாத்சாலியின் மனைவியும் மகளுமே எனது மனைவி அசாத்சாலியின் நாவல வீட்டில் இருப்பதாக எனக்கு அறிவித்தார்கள். இதனையடுத்தே நாம் நாவல வீட்டுக்குச் சென்றோம்.
அசாத் சாலி இதற்கு முன்பு பல திருமணங்கள் செய்துள்ளார். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரையும் திருமணம் செய்து விவாகரத்துச் செய்துள்ளார். இவர் பிரபல அரசியல்வாதிகளுடனிருந்து போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கு அரசியல் பலம் இருப்பதாக ஏமாற்றி வருகிறார்.
பெண்களை ஏமாற்றி கூட்டிச் சென்று ஹராமான வாழ்க்கை நடாத்தும் இவரது கேவலமான நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும்.
இவருக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்காமலிருந்ததற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி செலுத்த வேண்டும்.
அசாத் சாலியையும் எனது மனைவியையும் வெலிக்கடை பொலிஸுக்கு அழைத்து வந்து விசாரணை நடாத்துவதாக கூறிய பொலிஸார் எனது மனைவியை மாத்திரம் அழைத்து வந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அசாத்சாலி விசாரிக்கப்படவில்லை. இவருக்கு அரசியல் பின்புலத்தில் ஆதரவு இருப்பதாக தெரியவருகிறது.
மத்திய மாகாண சபை உறுப்பினராகவிருந்ததனால் கடந்த இரு வருடங்களாக எனக்கும் அசாத்சாலிக்கும் தொடர்பிருந்தது. எனது மனைவியும் அசாத்சாலியின் மனைவியும் இதன் மூலம் நண்பிகளானார்கள். இந்தக் காலத்திலே எனது மனைவிக்கும் அசாத்சாலிக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
என்னிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொள்ளாத எனது மனைவியுடன் அசாத் சாலி குடும்பம் நடாத்துவது இஸ்லாத்துக்கு முரணானதாகும். ஹராமாகும். சவுதியில் என்றால் இருவரும் சிரச்சேதம் செய்யப்படுவார்கள்.
தான் ஒரு சமூகத்தின் தலைவன் என்று கூறி கொண்டு இவ்வாறான கீழ்த்தனமான செயல்களில் ஈடுபடும் அவரை சமூகம் நிராகரிக்க வேண்டும்.
இவர் அரசியலுக்கே தேவையற்றவர். இதன் பிறகு அசாத்சாலியினால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். எமக்கு ஏதும் நடந்தால் அசாத்சாலியே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.
நாட்டு மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அசாத்சாலியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மேலும் பல ஊடக மாநாடுகளை நடாத்தி வெளிச்சத்துக்கு கொண்டு வரவுள்ளேன்.
ஒரு உண்மையான முஸ்லிம் செய்யும் வேலை அல்ல இது. இவரது இந்த மோசமான செயல்களை முடிவுக்கு கொண்டு வர சமூகம் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். உவைஸின் மகனும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். உவைஸின் மனைவிக்கும் அவருக்கும் இடையில் பல மாதங்களாக பிரச்சினை இருந்துள்ளது.
அவருடன் வாழ முடியாது என்று அவரது மனைவி கடிதமும் எழுதியுள்ளார்.
மனைவியை உவைஸ் லண்டனுக்கும் அழைத்துச் சென்று வைத்திருந்தார். அங்கும் சிறையில் போன்றே அடைத்து வைத்திருந்தார்கள்.
அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்தும் அவர்களது குடும்பப்பிரச்சினை தீரவில்லை.
தனது கணவனுடன் வாழமுடியாது தினமும் பிரச்சினை ஏற்படுகிறது என நுகேகொடை பொலிஸில் மகளிர் பிரிவில் முறைப்பாடும் செய்துள்ளார். இக்காலங்களில் இவர் தெஹிவளைப் பகுதியில் தனது உறவினர்கள் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
ஐந்து தினங்களுக்கு முன்பே உவைஸின் மனைவி அடைக்கலம் கோரி எனது நாவல வீட்டுக்கு வந்திருந்தார். நான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தேன். இதனையடுத்து உவைஸின் அடியாட்கள் எனது நாவல வீட்டினை சுற்றிவளைத்தார்கள். நான் உங்கள் முகத்தில் கூட விழிக்க விரும்பவில்லை என உவைஸின் மனைவி கூறிவிட்டார்.
அவரது மனைவியை 45 தினங்களாக நான் வைத்திருந்ததாகக் கூறுவதெல்லாம் பொய். அவர் எனது வீட்டுக்கு பணம் எடுத்து வரவில்லை. பொலிஸில் ஏற்கனவே முறைப்பாடு செய்து விட்டே வந்தார்.
எனக்கு அமைச்சு பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கிவருவது உண்மை. 2001ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பல்வேறு அச்சுறுத்தல்கள், கொலைப் பயமுறுத்தல்கள் இருப்பதனாலே இந்தப்பாதுகாப்பு வழங்கப்படுகிறது.உவைஸின் மனைவி விவகாரத்துக் கோரி கொழும்பு காதி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்.
இரண்டு விசாரணைகள் நடைபெற்றுள்ளன.
தான் எட்டு வருடங்களாக கணவருடன் தொடர்புகள் இல்லாமல் இருப்பதாக காதி நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் அசாத் சாலி கூறினார்.
