Featured Home (TOP)

Recent Comments

Monday, October 5, 2015

avathani Media Network

அம்பிட்டிகந்த பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயம் : 220 பேர் பாடசாலையில் தங்கவைப்பு

சீரற்ற கால­நிலை மற்றும் மண்­ச­ரிவு அபாயம் கார­ண­மாக பண்­டா­ர­வளை அம்­பிட்­டி­கந்த பெருந்­தோட்­டத்தில் 67 தொழி­லாளர் குடும்­பங்­களைச் சேர்ந்த 220 பேர் கடந்த சனிக்­கி­ழமை அங்­கி­
ருந்து வெளியேற்­றப்­பட்டு அம்­பிட்­டி­கந்த தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மேற்­படி தோட்­டத்தில் மண் சரிவு அபாயம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து, அங்­கி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­களை வெளியே­று­மாறு பிர­தேச செய­லாளர் உத்­த­ர­விட்டும் அவ் உத்­த­ர­வினை தொழி­லா­ளர்கள் செவி­ம­டுக்­க­வில்லை. அதை­ய­டுத்து பொலி­ஸாரின் துணை­யுடன் தோட்டத் தொழி­லா­ளர்கள் உட­ன­டி­யாக குறிப்­பிட்ட இடத்­தி­லி­ருந்து வெளியேற்றப்பட்டு அம்­பிட்­டி­கந்த தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டனர். இவர்­க­ளுக்­கான அனைத்து வச­தி­க­ளையும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சுப் பதுளை மாவட்டப் பணி­யகம் மேற்­கொண்­டுள்­ளது.
அத்­துடன், ஹப்­புத்­தளைப் பகு­தியின் உட­வே­றியா தோட்­டத்தின் 50 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள், அங்­கி­ருந்து வெளியேற்­றப்­பட்டு, பாது­காப்­பான இடங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.
கால­நிலை மாற்­றத்­தினால் பதுளை மாவட்ட மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :