Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 27, 2015

avathani Media Network

தனியார் துறையினரின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை

2500-rsதனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை இரண்­டா­யி­ரத்து ஐந்நூறு ரூபாவால் அதி­க­ரிப்­ப­தற்கு அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தொழில் மற்றும் தொழிற்­சங்க உற­வுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. சென­வி­ரத்ன தெரி­வித்தார்.


தேசிய தொழில் பாது­காப்பு வாரத்­தை­யொட்டி தொழில் திணைக்­க­ளத்தால் நடத்­தப்­பட்ட நிகழ்­வொன்றில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்; அரச ஊழி­யர்­க­ளுக்கு கடந்த கால கட்­டங்­களில் பல சந்­தர்ப்­பங்­களில் சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­பட்­ட­போதும் தனியார் துறை­யி­ன­ருக்கு அந்த சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை.

இதனால் அவர்கள் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்ளமையால் அவர்­க­ளுக்கு 2 ஆயி­ரத்து 500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுக் கொடுப்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுப்பேன்.

தனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை 2500 ரூபாவால் அதி­க­ரிக்­கு­மாறு தனியார் துறை­யி­ன­ரிடம் பல தட­வைகள் கோரிக்கை விடுத்தபோதும் அது சாத்­தி­ய­மா­க­வில்லை. தனியார் துறையின் சில நிறு­வ­னங்கள் மாத்­தி­ரம்தான் அரசின் கோரிக்­கையை ஏற்றுக்கொண்­டன.

இதன் அடிப்­ப­டையில் சில முத­லா­ளிமார் 1000 ரூபா­வி­னாலும் மேலும் சில நிறு­வ­னங்கள் 500 ரூபா­வி­னாலும் சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுக் கொடுத்­துள்­ளனர்.

ஆகை­யினால் விசேட சட்­ட­மூலம் ஒன்றின் மூலம் இந்த சம்­பள அதி­க­ரிப்பைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். அதே­போன்று தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம் என்றார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :