பொலன்னறுவை, குருப்பு சந்தி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறம் அமைந்துள்ள கோழிக் கூண்டில் கடந்த 8 வருடங்களாக வாழ்ந்து வந்த 70 வயதான முதியவர் ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த முதியவர் திருமணமாகாதவர் எனவும் குறித்த நபரை உறவினர்களே பராமரித்தது வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியவர் அடிக்கடி புகை பிடிப்பதாலே கோழிக் கூண்டில் தங்கவைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
