நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கிய இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் முகப்புத்தகத்தின் ஊடாக பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதேச சபை உறுப்பினர், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
பெண்ணொருவரை தொடர்பு படுத்தியே அவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தரவேற்றம் செய்துள்ளார்.
அந்த சந்தேகநபரை இரகசிய பொலிஸார் தேடிக்கொண்டிருந்த நிலையில், காலி பிரதேச சபை உறுப்பினராக சம்பத் அத்துகோரளை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜரானார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவின் சகிதமே நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
-ttnnews
