புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வந்த தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடிதங்களை விநியோகிக்கமாமல் பௌத்த விகாரையின் அலுமாரியில் வைத்த தபால் ஊழியர் ஒருவரே நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
119 என்னும் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முந்தல் பொலிஸார் மதுரங்குளி பௌத்த விகாரையிலுள்ள அலுமாரியினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 20 பதிவுத் தபால் மற்றும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சாதாரண தபால்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தபால் ஊழியரிடம் தொடர்ந்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். இவரை இன்று செவ்வாய்க்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
