கடந்த காலங்களில் சிலர் அந்த வோர் இந்த வோர் என யுத்தம் பற்றிய புத்தகங்களை எழுதியதாகவும், யுத்தம் பற்றி நன்கு தெரிந்த தான் ஓர் புத்தகத்தை விரைவில் எழுத உள்ளதாகவும் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை – பெலவத்தை வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனவரி மாதம் 8ம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி தேர்தல்களில் வெற்றியீட்டிய இந்த அரசாங்கம், அதன்படியே தற்போது செயற்படாமையால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
