Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 13, 2015

avathani Media Network

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும் நல்லாட்சியும்


வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்றப் பட்டு 2015 ஒக்­டோபர் மாதத்­துடன் 25 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. எனினும் அந்த மக்கள் இன்று வரை 'அக­திகள்' என்ற அவல நாமத்­து­ட­னேயே காலத்தைக் கடத்தி வரு­கின்­றனர்.

புதி­தாக ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லா­வது தமது மீள்­கு­டி­யேற்ற கனவு நன­வா­குமா என்ற ஏக்­கத்தில் அந்த மக்கள் காத்­தி­ருக்­கின்­றனர்.


கடந்த 100 நாள் ஆட்சிக் காலத்தின் போது வட மாகாண முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிக்­கு­மாறு மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ரிடம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார்.  

அத்­துடன் விரைவில் அம்­மக்­களை சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும்  முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் வாழும் தமிழ்-, முஸ்லிம்  மக்­களின்  காணிப் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் பிர­தமர்  உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். 

ஆனால் 100 நாள் ஆட்சி முடிந்து தேசிய அர­சாங்­கத்தின் ஆட்­சியில் இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் இது விட­யத்தில் எந்­த­வித ஆக்­க­பூர்­வ­மான விட­யங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

1990 ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்ட வடக்கின்  5 மாவட்­டங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. 

ஆங்­காங்கே சிறு தொகுதி மக்­களை மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட போதிலும் சகல மக்­க­ளையும் மீள்­கு­டி­ய­மர்த்­தவோ அவர்­க­ளுக்குத் தேவை­யான அடிப்­படை வச­தி­களைப் பெற்றுக் கொடுக்­கவோ மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் அக்­கறை செலுத்­த­வில்லை.

புதிய அர­சாங்­கத்தில் மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக டி.எம்.சுவா­மி­நாதன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதே அமைச்சின் இரா­ஜாங்க அமைச்­ச­ராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் பதவி வகிக்­கிறார். அந்த வகையில் இவ்­விரு அமைச்­சர்­களும் வட மாகாண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் காத்­தி­ர­மான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

அதே­போன்று இதற்குத் தேவை­யான ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டி­யது வட மாகாண முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் கடப்­பா­டாகும்.

வடக்கில் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தாம­த­மா­வ­தற்கு முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே நிலவும் ஒற்­று­மை­யின்­மையும் பிர­தான காரணம் என்­பதை நாம் மறந்­து­விட முடி­யாது. அதே­போன்று வடக்­கி­லுள்ள தமிழ் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கி­டையே நிலவும் புரிந்­து­ணர்­வின்­மையும் இன­வாதக் கண்­ணோட்­டமும் இதற்கு மற்­று­மொரு தடை­யாகும்.

இந்த தடை­களைத் தாண்டி நல்லாட்சி அரசில் முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

இல்­லா­த­வி­டத்து வடக்கு முஸ்­லிம்­களின் மீள்குடியேற்றம் இதன் பிற்பாடும் எட்டாக்கனியாகவே போய்விடும்.  அவ்வாறான ஒரு நிலை ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது.


-நன்றி விடிவெள்ளி

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :