டுபாய் செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டுள்ளது.
டுபாய் செல்வதற்காக நேற்றிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்ற விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு காலாவதியானதாக குற்ற புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அங்கு விரைந்த சி.ஜ.டி. வீரவன்சவிடம் விசாரணை மேற்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் புதிய கடவுச்சீட்டை செய்துகொண்டு இன்று காலை விமான நிலையத்திற்கு சென்ற விமல் வீரவன்சவிடம் மீண்டும் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் டுபாய் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.
