அநீதி, அக்கிரமம், ஊழல், மோசடி போன்றவற்றுக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளாக 'வார உரைகல்' எனும் பெயரில் வாராந்தப் பத்திரிகை, இணையதளம், டுவீட்டர் குறுஞ்செய்திச் சேவை போன்றுவற்றை நாடாத்தி வந்த செய்தியாசிரியர் புவி றஹ்மத்துல்லாஹ்வுக்கு எதிராக வீட்டில் கஞ்சா இருந்ததாக குற்றச்சாட்டப்பட்டு மட்டக்களப்பு நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரண்டு வருடங்களின் பின் கடந்த 06ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவர் நிரபராதி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்தீர்ப்பின் 16 பக்கங்கள் கொண்ட உறுதிப்படுத்தப்பட்ட பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.















