பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவுமாறும் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின்
காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் கோரிக்கை
விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு எழுத்து மூலம் (1.10.2015) கடிதமொன்றை
அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி பிரதேச
இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் தெரிவித்தார்.
அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
காத்தான்குடியில் கடந்த சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி
ஏத்துக்கால் கடற்கரையில் தொடர்ச்சியாக கடலரிப்பு இடம் பெற்றுவருகின்றது.
இதனால் இந்த கடற்கரை பிரதேசம் சுமார் ஐம்பதடியளவில் கடலுக்குள் சென்றுள்ளது.
இதனால் இங்குள்ள மீனவர் தங்குமிடக்கட்டிடத்தின் அத்திவாரம் ஒன்று
விழுந்துள்ளதுடன் அந்தக் கரையோரமுள்ள மீனவர் தங்குமிடக்கட்டிடம் மற்றும்
அங்குள்ள மீனவர்களுக்கு நிர்மானிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும்
நிலையக் கட்டிடம் என்பவற்றுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இங்குள்ள மீனவர்கள் தமது படகுகளை நிறுத்துவதிலும் அதனை கடலுக்கு
கொண்டு செல்வதிலும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்தக் கடலரிப்பு காரணமாக மீனவர்களின் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே சுனாமியினால் பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள் மீண்டும்
கடலரிப்பினால் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
எனவே இவைகளை கருத்திற்கொண்டு இங்கு ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுக்க
நடவடிக்கை எடுக்குமாறும் இதனால் தொழில் பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கு
உதவ நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அதில் மேலும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக்கடிதத்தின் பிரதிகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன
யாப்பா மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் காத்தான்குடி
பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்
கட்சியின் காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் மேலும்
தெரிவித்தார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
