பாரிய ஊழல் மோசடி தொடர் பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரையில் 1247 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
இவற்றுள் 200 முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் 50 முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்னம் மீது சுமத்தப்பட்ட பாரிய ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
