வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறும் கால கட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் வெளிநாடுகள் செல்வதை இடை நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் நடைபெறும்போது அமைச்சர்கள் ஆளுந்தரப்பு எம்.பி.க்கள் சபையில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் பிரதமர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அதேவேளை ஐ.தே. கட்சித் தலைமையிலான சிறிகொத்தாவில் இடம்பெறும் மக்கள் சந்திப்பும் வரவு செலவுத் திட்ட விவாதம் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
