மார்க்க கல்வியறிவு சிறந்த முறையில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனைக்கொண்டு அவர்கள் தமது சமூகத்திற்கும் பிரதேசத்திற்கும் சிறந்ததோர் பங்களிப்பினை
வழங்கி சமூகத்தினை தீய விடயங்களிலிருந்து நல்வழிப்படுத்த வேண்டும் என்ற
நோக்கில் கல்குடா பிரதேசத்தில் பிறைந்துறைச்சேனையில் இயங்கி கொண்டிருக்கும்
றவ்லதுல் அத்பால் லிதாலிமில் குர்ஆன் மதரஸா மற்றும் மீராவேடையில் இயங்கி
கொண்டிருக்கும் உம்முல் ஹைர் முஸ்லிம் மகளிர் அரபிக்கல்லூரி ஆகிய இரு
மதரஸாக்களும் அபிவிருத்தி அடைய வேண்டும் அதன் மூலம் தங்களுடைய மார்க்க
கல்வியினையும் கடமைகளையும் சிறந்த முறையில் செவ்வனே செய்ய வேண்டும் என்ற
நோக்கத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பெறியியலாளர்
ஷிப்லி பாறூக் அவர்களின் நிதி ஒதுக்கிட்டில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை
(01.11.2015) இந்த இரண்டு மதரஸாக்களுக்கும் தலா 120,000.00 ரூபாய் பெறுமதியான
இரு போட்டோ கொப்பி இயந்திரங்கள் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)