(முஹம்மட் ஜெலீல்-நிந்தவூர்)
அகர ஆயுதம் கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளி நிகழ்வானது இன்று 01-11-2015 ஞாயிறு நிந்தவூர் அல்- மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு இலங்கை கிராமிய இலக்கிய கலைஞரும் சட்டத்தரணியுமான எஸ். முத்துமீரான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு வடக்கு பிரதேச யாழ் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களிலிருந்து ஆண் மற்றும் பெண் இலக்கிய கலைஞர்களென பலர் கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வானது தமிழ் முஸ்லிம் உறவுகளை இலக்கியத்தினூடக கட்டியெழுப்பும் நோக்கில் கனடா இயங்கு படைப்பாளிகள் உலகு அமைப்பின் இலங்கை ஒருங்கிணைப்பாளர், யோ புரட்சி மற்றும் முல்லைதீபன் ஆகியோரின் தலமையில் இக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
மேலும் இம்முறை அமர்வு கிராமிய கலை இலக்கிய மரபுரை நிகழ்வாக பொல்லடி நிகழ்வொன்றினை பறைசாத்தியமை குறிப்பிடத்தக்கது.
முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்






