Featured Home (TOP)

Recent Comments

Thursday, November 5, 2015

avathani Media Network

யுத்தத்தின்போது பெறப்பட்ட நகைகளை மஹிந்த தனது பாரியாருக்கு வழங்கினாரா?

தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­றுதி தற்­பொ­ழுது வரையில் ஏன் நிறை­வேற்­றப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப் பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.

வடக்கில் பெறப்பட்ட நகைகளை மஹிந்த ராஜபக் ஷ தனது பாரியார் அணிந்து கொள்வதற்கு வழங்கினாரா எனவும் அவர் வினா தொடுத்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­ கி­ழமை இடம்­பெற்ற சபை ஒத்­தி­வைப்புவேளை மீதான விவாதத்தின்போது உரையாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் சபையில் உரை­யாற்­று­கையில்
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்­ததை அடுத்து அங்கு பெரு­ம­ள­வான ஆயு­தங்­களும் தங்க நகை­களும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. எனினும் முன்னாள் ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக கிளி­நொச்­சிக்கு சென்ற போது குறிப்­பிட்­ட­ள­வா­னோ­ருக்கு தங்க நகை­களை வழங்­கி­யி­ருந்தார்.
யுத்­தத்தின் போது கைப்­பற்­றப்­பட்ட தங்க நகை­களை 5 வரு­டங்­க­ளாக வைத்­தி­ருந்த ஜனா­தி­பதி அவற்றை என்ன செய்தார் என்ற கேள்வி எழு­கி­றது. அதே நேரம் ஏனைய தங்க நகை­களை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­காக பொதி செய்­யப்­பட்டு அவர்­களின் பெயர்கள் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தன. இருப்­பினும் அவற்­றிற்கு என்ன நிகழ்ந்­தது என்­பது தெரி­யா­துள்­ளது. இவற்றின் உண்மை நிலை­களை அர­சாங்கம் வெளிப்­ப­டுத்த வேண்டும். உண்மையில் எஞ்சிய நகைகள் எங்கே? அவற்றை மஹிந்த தனது பாரியார் அணிவதற்கு வழங்கினரா?
கே.பி.யைக் கைது செய்­தார்கள். இன்று வரையில் அவர் நீதி­மன்­றத்தில் முன்­நி­லைப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் உள்ளார். அவர் மீது விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மென ரீட் மனுவொன்றை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்­துள்ள போதும் அவர் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. விசா­ர­ணைகள் இன்­றிய நிலை­யி­லேயே இருக்­கின்றார்.
இவ்­வா­றான நிலையில் தமி­ழ் அ­ர­சியல் கைதிகள் 20வரு­டங்களுக்கும் அதி­க­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அர­சியல் கைதி­களை 7 வரு­டங்­க­ளுக்கு அதி­க­மாக தடுத்து வைத்­தி­ருக்க முடி­யாது. இருப்­பினும் தமிழ் அர­சியல் கைதிகள் நீண்ட கால­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.
இதனை வெளிப்­ப­டுத்தும் போது தமிழ் அர­சியல் கைதிகள் இல்­லை­யென அமைச்­சர்கள் முண்­டி­ய­டித்­துக்­கொண்டு கூறு­கின்­றார்கள். தமிழ் அர­சியல் கைதிகள் உண்ணா விர­தத்தை மேற்­கொண்­டி­ருந்த சம­யத்தில் ஒக்­டோபர் 31 ஆம் திகதி ஆரம்­பித்து நவம்பர் 7 ஆம் திக­திக்குள் இந்த விவகாரத்தை நிறைவு செய்­வ­தாக அரச தரப்பில் வாக்­கு­று­தி­ய­ளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அது தொடர்பில் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
ஊழல் மோச­டிகள், எவன்கார்ட் விடயம் தொடர்­பாக இந்த சபையில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­போதும் அமைச்­சர்கள் மீதும் அதி­கா­ரிகள் மீதும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டபோதும் அனை­வரும் அமை­தி­யாக இருக்­கின்­றார்கள். ஆகவே குற்றம் இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது உறு­தி­யா­கின்­றது.
உண்­மை­யி­லேயே மிதக்கும் ஆயுதக் கப்­ப­லொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்ட போது மக்கள் அதிர்ச்­சி­ய­டைந்­தார்கள். இவ்­வா­றான ஆயுதக் கப்­பல்கள் இலங்­கையை தாண்டி ஆபி­ரிக்­காவின் கரை­யோ­ரத்தில் இருக்­கின்­ற­தாக தக­வல்கள் உள்­ளன.
ஆபி­ரிக்­காவில் ஆயு­தங்கள் வாட­கைக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன என்­பது இந்த விட­யத்தின் ஒரு பக்­க­மாக உள்­ளது. மறு­பக்­கத்தில் இவ்­வா­றான கப்­பல்கள் எவ்­வாறு தோற்றம் பெற்­றன. இத­னு­டைய பங்­கா­ளிகள் யார் என்ற வினாக்கள் உள்­ளன. பயங்­க­ர­மான ஆயு­தங்கள் கொள்­வ­னவு செய்­யப்­படும் போது அல்­லது வாட­கைக்கு பெறப்­படும் போது அவற்றின் தொடர் இலக்­கங்கள் பதி­வேட்டில் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.
அவ்­வா­றி­ருக்­கையில் இலங்­கையில் காலத்­திற்கு காலம் கண்டு பிடிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்­பான பதி­வுகள் உள்­ள­னவா? அவை தொடர்­பான தக­வல்கள் எங்கே? என்­பது வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். தவ­றுகள் இடம் பெற்­றி­ருக்­கின்­றன. எனவே அந்த உண்­மைகள் நாட்­டிற்கு பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்டு அவர்கள் கைது செய்­யப்­ப­ட­வேண்டும்.
தற்­போது வரையில் அவ்­வா­றா­ன­வர்கள் எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக தமிழ் அர­சியல் கைதிகள் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதிருக்கின்றன. சிறு சிறு குற்றங்களுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையானது தமிழர்கள் என்ற பாரபட்சத்தினாலா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை இந்நிலையில் அரசாங்கம் அடுத்த வருடம் வரை நீடிக்குமா என்று ஐயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :