Featured Home (TOP)

Recent Comments

Wednesday, November 4, 2015

avathani Media Network

காவ­ல்நிலையத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் பலாத்காரம்; பொலிஸ் சார்ஜன்ட்க்கு சிறைத்­தண்­டனை

வென்­னப்­புவ தோப்­புவ பொலிஸ் காவ­ல­ரணில் வைத்து 40 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயை பல­வந்­த­மாக வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் தொட­ரப்­பட்ட வழக்கில் அச்­ச­மயம் வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்­றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீதான குற்றம் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அவ­ருக்கு கடும் வேலை­யுடன் கூடிய பத்து வருட சிறைத்­தண்­டனை வழங்கி சிலாபம் மேல் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. அத்­துடன் அவ­ருக்கு ஏழா­யி­ரத்தி ஐநூறு  ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த தண்­ட­னை­க­ளுக்கு மேல­தி­க­மாக பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு இரு­பத்தையா­யிரம் ரூபா நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும், இந்தத் தொகை மற்றும் அப­ராதத் தொகை என்­ப­வற்றை செலுத்தத் தவறின் அதற்­காக ஆறு மாதங்கள் மேலும் இலகு சிறைத் தண்­டனை அனு­ப­விக்க நேரிடும் எனவும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பஸ்­யால கொட்­டு­வெல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த 58 வய­து­டைய ஒரு­வ­ருக்கே இவ்­வாறு தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் பொலிஸ் சார்­ஜன்­டான இவர் இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து பணி­நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்­ததோடு அதன் பின்னர் பன்­னல பிர­தே­சத்தில் தொழி­லா­ளி­யாகப் பணி­யாற்றி வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தினம் ஒன்றில் வென்­னப்­புவ பொலிஸ் பிரிவின் தோப்­புவ பொலிஸ் காவ­ல­ரணில் வைத்து அப்­போது 40 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாய் ஒரு­வரை பல­வந்­த­மான முறையில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் இவ்­வ­ழக்குத் தொட­ரப்­பட்­டிருந்தது. சம்­ப­வ­தினம் இரவு குற்றம் சுமத்­தப்­பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்­ட­பிள்­க­ளுடன் சிலாபம் கொழும்பு வீதியின் வைக்கால் தோப்பு பாலத்தின் அருகில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் காவ­ல­ரணில் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்­துள்ளார். இந்­நே­ரமே இவ்­வாறு அங்கு வைத்து குறித்த பெண் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.
நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்ட சாட்­சி­யங்களின் பிர­காரம் குற்­ற­வாளிக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல்ரணராஜாவினால் அவருக்கு இவ்வாறு தண் டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :