மட்டக்களப்பு சவுக்கடிக் கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் அலையில் சிக்கியதையடுத்து, நீரில் மூழ்கி 18 வயதான இளைஞன் மரணமடைந்துள்ளார்.
மயக்கமுற்ற நிலையில் மற்றுமொரு இளைஞன், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த முஹமட் அம்ஜத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் நான்கு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தவேளையில் இந்த இருவரும் பாரிய அலையில் சிக்கி அள்ளுண்டு செல்லப்பட்பட்டுள்ளனர்.
அதிலொருவரே பலியாகியுள்ளார். ஏனைய இரண்டு இளைஞர்களும் நீந்திக் கரை சேர்ந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
