Featured Home (TOP)

Recent Comments

Monday, November 16, 2015

avathani Media Network

தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்­திற்கு ஜனா­தி­ப­தியின் பதில் இன்றுஜனா­தி­ப­தியின் பதில் இன்று

தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்றைய தினம் தனது பதிலை வழங்­க­வுள்ள நிலையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி கள் மற்றும் அவர்­களின் உற­வி­னர்கள் பலத்த எதிர்­பார்ப்­பு­டனும் நம்­பிக்­கை­யு­ட­னு­ம் இருக்கின்றனர்.


நீண்­ட­கா­ல­மாக நாடளா­விய ரீதியில் உள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் வலி­யு­றுத்தி வந்­தி­ருந்­தனர்.
இந்­நி­லையில் கடந்த மாதம் 12ஆம் திகதி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.
ஐந்து தினங்­களின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய வாக்­கு­று­திக்கு அமை­வாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மகசின் சிறைச்­ச­லைக்குச் சென்று நேரில் வழங்­கிய உறு­தி­மொ­ழி­யை­ய­டுத்து உண்­ணா­வி­ர­தத்தை கைதிகள் இடை­நி­றுத்­தி­யி­ருந்­தனர்.
இருப்­பினும் வழங்­கப்­பட்ட வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டா­மை­யை­ய­டுத்து கடந்த 8ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் மீண்டும் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.
இவ்வாறான பின்னணியில் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்வன் தலை­மை­யி­லான மாகாண அமைச்­சர்கள் நால்­வரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தி­ருந்­தனர். இச்­சந்­திப்பின்­போது கைதி­களின் விடுதலை தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் வடக்கு முதல்வர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.
அதற்­க­மை­வாக சில அர­சியல் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்ட ஜனா­தி­பதி தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் விப­ரங்கள் அவர்­களின் கோப்­புக்கள் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளையும் தன்­னி­டத்தில் இன்று திங்­கட்­கி­ழமை சமர்ப்­பிக்­கு­மாறு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு பணிப்­புரை விடுத்­தி­ருந்தார். அத­னை­ய­டுத்து கைதி­களின் விட­யத்­திற்கு உரிய பதிலை இன்று வழங்­கு­வ­தா­கவும் அவர் உறு­ய­ளித்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் இன்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்திற்கு உரிய பதிலை வழங்குவார் என நம்பிக்கை கொண்டிருப்பதாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளும், அவர்களது உறவினர்களும் எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கையுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
virakesari.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :