Featured Home (TOP)

Recent Comments

Friday, December 11, 2015

avathani Media Network

12,000 விடுதலைப் புலி­களை விடு­வித்­த­போது இல்­லாத அச்­சு­றுத்தல் கோத்­தா­வுக்கு தற்­போது வரு­கி­றதா

விடுதலைப் புலி­களின் முக்­கிய தலை­வர்­களை பக்­கத்தில் வைத்­தி­ருந்த போதும், 12 ஆயிரம் புலி­களை விடு­தலை செய்­த­போதும் மஹிந்த, கோத்­தபாய ஆகி­யோ­ருக்கு ஏற்­ப­டாத உயிர் அச்­சு­றுத்தல் தடுப்பில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் ஏற்­ப­டப்­போ­கின்­றதா என முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா கேள்வி எழுப்­பினார்.
சிங்­கள மக்­களை சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக திருப்பும் முயற்­சி­களை இவர்கள் இன்னும் கைவி­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.
தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தமது உயி­ருக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜபக் ஷ ஆகியோர் தெரி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில், கடந்த காலத்தில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்னர் விடு­தலைப் புலி­களின் சர்­வ­தேச பிரி­வினால் நாட்­டிற்கு எதி­ரான பல­மான செயற்­பா­டுகள் காணப்­பட்­டன. ஆனால் நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத மோதலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­ட­வில்லை.
ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் அர­சியல் செயற்­பா­டு­களை தக்­க­வைக்கும் ஒரே நோக்­கத்­தி­லேயே நாட்டில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னரும் ஐந்து ஆண்­டு­க­ளாக தொடர்ச்­சி­யாக புலிக்­க­தை­களை கூறி வந்­தனர். இன்றும் அதே கதை­களை கூறி மக்­களை ஏமாற்ற முயற்­சிக்­கி­றார்கள்.
முன்னாள் அர­சாங்­கத்தில் 12ஆயிரம் விடு­த­லைப்­பு­லி­களை விடு­வித்­தனர். புலி­களின் முக்­கிய தலை­வர்­களை அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொண்டு கட்­சி­யிலும் அமைச்­சு­க­ளிலும் முக்­கிய பத­வி­களை வழங்­கினர். அவ்­வாறு இருக்­கையில், சர்­வ­தேச புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­களை வைத்­தி­ருந்த போதும், புலி உறுப்­பி­னர்­களை அருகில் வைத்­தி­ருந்த போதும் இவர்­க­ளுக்கு உயிர் அச்­சு­றுத்தல் எவையும் ஏற்­ப­ட­வில்லை.
ஆனால் சந்­தே­கத்தின் பேரில் தடுத்து வைத்­துள்ள தமிழ் கைதி­களை விடு­விக்க கோரும்­போது அவர்­களால் மஹிந்த, கோத்­தபாய ஆகி­யோரின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக கூறு­கின்­றனர். இதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சிங்­கள மக்­களை சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக முரண்­ப­ட­வைக்கும் ஒரு நட­வ­டிக்­கையே இவர்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.
இந்த அர­சாங்கம் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­காது பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றது. குறிப்­பாக எவன்கார்ட் விவ­கா­ரத்தில் நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ பக்­க­ச்சார்­பாக செயற்­ப­டு­கின்றார் என்­பதை நான் ஆரம்­பத்தில் இருந்தே தெரி­வித்து வரு­கின்றேன்.
அதேபோல் மேஜர் நிஸ்­ஸங்க சேனா­தி­ப­தியும் அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவும் அமெ­ரிக்­காவில் நெருங்­கிய நண்­பர்­க­ளாக செயற்பட்டு எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் உடன்படிக்கைகளை மேற்­கொண்­டுள்­ளமை தொடர்பில் ஆதா­ரங்­களும் என்­னிடம் உள்­ளன.
இவை தொடர்­பான புகைப்­ப­டங்­களை நான் ஊட­கங்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளேன். அவ்­வாறு இருக்­கையில் அர­சாங்கம் இந்த விவ­காரம் தொடர்பில் மூடி­ம­றைக்­காது உண்­மை­களை கண்டறிய வேண்டும் என்றார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :