தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 பேரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
