முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்க்ஷவிடம், பாரிய நிதிமோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மானிக்கப்பட்ட ஆடம்பர வீடு ஒனறை, மிகக் குறைந்த விலையில் தமது ஊடக ஆலோசகர் ஒருவருக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து எதிர்வரும் வாரமளவில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
சிரந்தி ராஜபக்ஷ, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் மேல் மதிக்கத்தக்க வீடு , குறைந்த விலையில் பெற்றுக் கொடுத்தமைத் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு பல அரச அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சிரந்தி ராஜபக்ஷவிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
