Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 9, 2015

avathani Media Network

கடலில் மிதப்பதாக கூறப்பட்ட சடலங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை!


கிழக்கு கடற்கரைப் பகுதியில் மிதப்பதாக கூறப்பட்ட சடலங்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி கடற்படையினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். 

நேற்றையதினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கைகளை நூறு வீதம் பூர்த்தி செய்ய முடியாமல் போனதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, இதற்காக மூன்று படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

எதுஎவ்வாறு இருப்பினும் இதுவரை இது குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
adaderana.lk 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :