பேலியகொட – புளுகஹாஹந்திய பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரு காவற்துறை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
பேலியகொட காவற்துறையில் போக்குவரத்து பிரிவில் சேவையில் ஈடுபட்டிருந்த இரு காவற்துறையினரே இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தில் இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையிள் பேச்சாளர் தெரிவித்தார்.
பேலியகொட புளுகஹாஹந்திய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சிற்றூர்தி ஒன்றிற்கு அருகில் வந்து நபர் ஒருவரால் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதை தடுப்பதற்காக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரிகள் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு அவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
