Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 2, 2015

avathani Media Network

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட விளையாட்டு நிகழ்வுகள்.

சர்வதேச மாற்றுத்தினாளிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு புனர் வாழ்வு அமைப்புக்களுடன் இணைந்து 3 நாள் நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் முதலாவது நாள் நிகழ்வாக மக்கள் பிரதிநிதிகள் மாற்றுத்திரனாளிகளை சந்திக்கும் நிகழ்வு  நேற்று நடைபெற்று முடிந்தது.

2 வது நாளாக இன்று விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கி உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

காலையில் சைக்கில் ஒட்டமும் அதனைதொடர்ந்து கிரிக்கட், பூட்போல், வொலிபோல் போன்ற இன்னும் பல விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக Mr. V. தவராஸா (பிரதேச செயலாளர் மண்முனை வடக்கு), Mr. S. ரங்கநாதன் (பிரதேச பிரதிச்செயலாளர் மட்டக்களப்பு), Mr. அலெக்ஸ் பென்ஜெமின் (கிழக்கு பகுதி முகாமையாளர் வோர்ல்டு விஷன்), Mr. M. உதயகுமார் (மட்டக்களப்பு மாநகராட்சி அதிகாரி), Mr. K. கான்டீபன் (கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவி இயக்குனர்),  Mr. செல்வராஸா (தலைவர் ட்ரேட் யூனியன் மட்டக்களப்பு) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முதலாவது நிகழ்வான சைக்கிளோட்டம் Mr. V. தவராஸா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

3வது நாளான நாளை ஊர்வலம் ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினார். ஊர்வலமானது மட்டக்களப்பு சென்மைகள் கல்லூரியில் ஆரம்பித்து மட்டக்களப்பு மகஜனக்கல்லூர்யை வந்தடையும் என அவர்கள் தெரிவித்தனர்.


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :