Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 17, 2015

avathani Media Network

மை வீசிய மாணவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில் காத்தான்குடியில் சம்பவம்.

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடியில் பிரபலமான பாடசாலை ஒன்றில்  கல்வி பயின்று இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை எழுதி விட்டு வழமை போன்று நண்பர்களுடன் சேர்ந்து ஒருவர் மற்றவர் மீது இறுதி நாளான இன்று வீதியில் மையடிக்கும் கலாசாரத்தினை மேற் கொண்ட வேளை அவ்வீதியால் வந்த சிலர் மேற் கொண்ட அதிரடி தாக்குதலினால் இரு மாணவர்கள் வைதியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்படி தாக்குதலுக்கு இலக்காகி காத்தான்குடி வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட முஹம்மது அதாயி மற்றும் எம்.லப்ரி என்ற மாணவர்களை நேரினில் சென்று  பார்வையிட்ட போது.......

பரீட்சை இறுதி நாள் இன்று என்பதனால் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் வழமை போன்று ஒரவருக் கொருவர் நாங்கள் மையடித்து கொண்டிருந்த வேளை வீதியால் சிகப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மேலும் சிலர் எங்கள் மீது சாரமாரியாக தாக்குதலை மேற் கொண்டு விட்டு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்ததோடு தாங்க  முடியாத வலியின் காரணமாகவே எமது ஏனைய மாணவர்கள் மூலம் தாங்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக கவலையோடு தெரிவித்தனர்.

மாணவர்களாகிய நாங்கள் இவ்வாறான செயலில் ஈடுபடுவது என்பது தவிர்க்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் மாணவர்களாகிய எங்களை வீதியில் வைத்து தாக்குவது என்பது சட்டவிரோதமாகும் என்பதுடன் இவ்வாறு எங்களை தாக்குவதற்கு  இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் மாணவர்கள் தங்கள் கவலையினை தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை  தேவை ஏற்பட்டால் நாங்கள் அடையாளம் காட்ட தயாராக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க.......

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவிகள் இன்று மையடித்து தங்கள் மகிழ்ச்சியினை வெளியிட்டதினையும் காணக்கூடியதாக இருந்தது. 








avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :