(முஹம்மட் ஜெலீல் நிந்தவூர்.)
நிந்தவூர்-4ம் பிரிவு கடற்கரைப் பகுதியில் நேற்றிரவு மீனவர் வாடியொன்று தீயில் எரிந்ததில் வாடிக்குள்ளிருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இத்தீ விபத்து தொடர்பாக அப்பிரதேசத்திலுள்ளவர்களிடம் வினாவியபோது தீப்பற்றிய வாடிக்குள் மீனவர்கள் சிலர் இரவு வேளைகளில் மது அருந்திக்கொண்டு "கஞ்சா புகைக்கின்றனர் அதில் ஏதோ தீ பறந்ததில் ஓலை கிடுகினால் கட்டப்படிருந் இவ்வாடி எரிந்திருக்கலாமென சந்தேகிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பாக வாடி உரிமையாளர் கூறுகையில் இத் தீ விபத்து தொடர்பாக அவர் 6 நபர்களை சந்தேகிப்பதாகவும் அவர்களை போலிஸ் முன்னிலையில் அடையாளம் காண்பிக்கப்போவதாக கூறினார்.




