Featured Home (TOP)

Recent Comments

Tuesday, December 29, 2015

avathani Media Network

இந்து சமயத்தை நிந்தித்தது மௌலவி ஸஹ்றானா, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வா?

(முஹம்மது நியாஸ்)

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முகநூல் என்னும் சமூக வலைத்தளத்தினூடாக சில நபர்கள் மௌலவி ஸஹ்றான் தன்னுடைய சொற்பொழிவொன்றின் போது இந்து சமயத்தை கேவலப்படுத்தி விட்டார் என்றும், இன நல்லுறவு(?)க்கு விரிசல்களை ஏற்படுத்தி அதில் குளிர் காய்கிறார் என்றும் கூக்குரல் எழுப்பிவருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதன் உண்மை நிலவரம் என்னவென்பது குறித்து தீவிரமான தேடலில் ஈடுபட்டபோது இந்துக்களின் குரல் என்னும் புனை பெயருடன் இஸ்லாமியர்கள் மீதான துவேசத்தை பரப்பக்கூடிய இந்துத்துவா பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த ஒரு இனவாதப்பேர்வழி மௌலவி ஸஹ்றானுடைய சொற்பொழிவின் போது அவர் சுட்டிக்காட்டிய ஒரு விரிவான விடயத்தை முன்னாலும் பின்னாலும் கத்தரித்துவிட்டு இடையிலுள்ள ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு "ஒரு இஸ்லாமியன் இந்து மதத்தை கேவலப்படுத்தி விட்டான்" என்று முஸ்லிம்கள் மீதான குரோதத்தை தன்னுடைய முகநூலில் கொப்பளித்திருப்பதை நான் அவதானித்தேன்.

அந்த இனவாதக்காடையனின் வஞ்சகத்தனமான கருத்துக்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக மத நல்லிணக்கம் என்னும் போர்வையில் காத்தான்குடியைச் சேர்ந்த நமது இஸ்லாமிய பெயர் தாங்கிய சில கோடாரிக்காம்புகளும் ஒன்றுகூடி பக்க வாத்தியமிசைத்து மௌலவி ஸஹ்றான் மீது தங்களுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த நீண்ட நாள் வஞ்சத்தை கொட்டித்தீர்த்திருந்தார்கள்.

இதில் காத்தான்குடியிலுள்ள சில சேய்களால் மாத்திரம் தாய் நிறுவனம் என்றழைக்கப்படுகின்ற காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் உறுப்பினராக இருப்பதாக தனக்குத்தானே கூறிக்கொள்கின்ற ஒரு அரைவேகாட்டுப்பேர்வளியும் இன்னும் சில படிகள் மேலே ஏறிச்சென்று அந்த இனவாதக்காடையனிடம் "நீங்கள் எங்களது ஊருக்கு வந்தால் நான் ஸஹ்றான் இருக்கின்ற இடத்தை காட்டித்தருகிறேன்" என்றெல்லாம் பித்துப்பிடித்த மனநோயாளியைப் போன்று பைத்தியகாரத்தனமாக உளறிவைத்திருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இத்தனைக்கும் அந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது என்று நான் ஆராய்ந்து பார்த்தபோது,
கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இந்துசமய மக்களுடைய தீபாவளி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்னால் ஷூரா சபை உறுப்பினர் MBM. பிர்தௌஸ் (நளீமி) மங்கள விளக்கேற்றியது தொடர்பில் கண்டன உரை நிகழ்த்திய மௌலவி ஸஹ்றான் அந்த உரையில் ஓரிடத்தில் இந்து சமய மக்களுடைய வணக்க வழிபாடுகளை பற்றி கூறும்போது "அவர்கள் கழுதையை கூட கடவுளாக நமபக்கூடியவர்கள்" என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்திற்கு முன்னாலும் பின்னாலும் மௌலவி ஸஹ்றான் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் நயவஞ்சகத்தனமாக நீக்கிவிட்டு குறித்த இந்த பகுதியை மாத்திரம் முகநூலில் வெளியிட்டு இஸ்லாமியர்கள் மீதான குரோதத்தை கொப்பளித்த இந்துத்துவா பயங்கரவாதியிடம் மௌலவி ஸஹ்றானை ஒரு தீவிரவாதியாக சித்தரித்து அதன் மூலம் தங்களுடைய இனங்களுக்கிடையிலான நல்லுறவை(?)யும் மாற்றுமத மக்களுடைய நல்லாதரவையும் பெறுவதற்கு காக்கை வன்னியன் வம்சத்தில் வந்த நமதூரைச்சேர்ந்த கடைசி வாரிசுகள் சிலர் கடினமாகவே முயற்சித்துள்ளனர்.

இதை நாம் யதார்த்தமாக விளக்குவோமானால் உயிரே இல்லாத கற்களை, சிலைகளை கடவுளென்று வழிபடுகின்ற இந்துசமய மக்களுக்கு ஒரு உயிரும், ஐந்து அறிவும் இருக்கக்கூடிய கழுதை என்னும் பிராணியை கடவுளென்று நம்புவதில் எதுவித ஆட்சேபனைகளும் இருக்கப்போவதில்லை. காரணம் நாயைக்கூட பைரவர் என்னும் பெயர் கொண்ட கடவுளாகக்கருதி வழிபடக்கூடிய இந்துக்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் பல மாவட்டங்களில் பன்றியை கடவுளாக வழிபடக்கூடிய இந்துசமய மக்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்கின்றபோது கழுதையை மாத்திரம் கடவுளாக நம்புவதற்கு இந்து சமய மக்களுக்கு முன்னால் இருக்கக்கூடிய தடைகள்தான் என்ன?

இதை மத நல்லிணக்கம் என்னும் பெயரால் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞனை காட்டிக்கொடுக்க முயற்சித்த நமது கோடாரிக்காம்புகள் விளக்குவார்களா?

மேலும் இந்த விடயங்களை நான் இந்து சமயத்தையோ அவர்களுடைய கடவுள்களையோ அவமதிப்பதற்காக கூறவில்லை. அந்த மக்களுடைய கடவுள் கோட்பாடு அவ்வாறுதான் இருக்கிறது. அதைத்தான் மௌலவி ஸஹ்றான் சூசகமான முறையில் சுட்டிக்காட்டினார். இதில் இந்த கோடரிக்காம்புகளும் இந்துத்துவா பயங்கரவாதிகளும் ஓரணியில் ஒன்றுதிரண்டு மத நிந்தனை என்று கூக்குரல் எழுப்பவதற்கு எதுவும் கிடையாது.

ஆனால் தாம் பின்பற்றுகின்ற இஸ்லாமிய மார்கத்தின் சட்டதிட்டங்களை கூட சரிவர படிக்காத, அறியாத அரைவேக்காடுகள் சிலர் ஒன்றிணைந்து இந்துசமயத்தையும், மத நல்லிணக்கத்தை(?)யும்  அடைகாப்பதற்காக படையெடுத்துச் சென்று கடைசியில் தன்னுடைய இஸ்லாமிய சகோதரன் ஒருவனையே தீவிரவாதியாகவும், மத நிந்தனையாளனாகவும் இந்துத்துவா பயங்கரவாதியிடம் சித்தரித்துக்காட்டிக்கொடுத்து தங்களை நல்லவர்களாக அடையாளப்படுத்த முயற்சிக்கின்ற கேவலமான கொடுமையை எந்த வார்த்தைகளை கொண்டுதான் நான் விளக்குவது?  ஸுப்ஹானழ்ழாஹ்........

உண்மையில் இவர்கள் சர்வமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மாற்றுசமய மக்களிடம் இஸ்லாமியர்கள் மீதான நல்லெண்ணத்தை ஏற்படுத்தத்தான் பாடுபடுகிறார்கள் என்ற வாதம் உண்மையானால் இந்த வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இந்த மத நல்லிணக்கவாதிகள் கண்டிப்பதற்கும் காட்டிகொடுப்பதற்கும் உரித்துடைய ஒரேயொரு நபராக இருப்பவர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்தான்.

காரணம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்தான் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக இருந்தபோது அந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்துசமய மக்களுடைய கோயில்களுக்கு சொந்தமான, ஏற்கனவே கோயில் இருந்த  காணியை அடாத்தாக ஆக்கிரமித்து அதை பள்ளிவாயிலுக்கு வழங்கி அதில் ஒரு பொதுச்சந்தை கட்டியதாக அவரே வாக்குமூலம் அளிக்கிறார்.

பிறசமய ஊடகவியலாளர்களால் நடாத்தப்படுகின்ற தமிழ்பேசும் இணையத்தளங்களில் இந்த விவகாரம் வைரசாகப்பரவி இஸ்லாமியர்கள் மீதான அவர்களுடைய ஆத்திரத்தையும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.

இதற்கு இந்த போலி மத நல்லிணக்கவாதிகளின் பொறுப்புடன் கூடிய பதில் என்ன?

“பிறசமயத்தவர்களுடைய கடவுள்களை நீங்கள் சபிக்காதீர்கள், காரணம் அவர்கள் உங்களுடைய அழ்ழாஹ்வை சபிப்பார்கள்” என்று அறிவுரை கூறுகின்ற இஸ்லாமிய மார்க்கத்தில் மாற்று சமய மக்களுடைய வணக்கஸ்தலங்கள் அமைந்திருந்த, அந்த மக்களுக்கு சொந்தமான காணியை தன்னுடைய அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அநியாயமான முறையில் அபகரித்துவிட்டு அதை ஊடகங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்திய ஹிஸ்புல்லாஹ்வுக்கு இந்த காத்தான்குடி சமூகத்திலுள்ள மதநல்லிணக்க(?)வாதிகள் என்ன தீர்ப்புக்கூறப்போகிறார்கள்.

இந்து சமய மக்களுடைய கடவுள்கோட்பாட்டை உள்ளது உள்ளபடி, முடியுமானவரை அவர்களது உள்ளம் நோகாத வண்ணம் எடுத்துரைத்த மௌலவி ஸஹ்றானை ஒரு மதத்தீவிரவாதியின் அளவுக்கு சித்தரித்து அதை ஒரு இஸ்லாமியர்களின் பரம எதிரிகளான இந்துத்துவா பயங்கரவாதிகளிடம் காட்டிக்கொடுத்த கேவலங்கெட்ட இக்கோமாளிகள் இந்துசமய மக்களுடைய புனிதஸ்தலத்தை தன்னுடைய அதிகாரத்தின் வாயிலாக அபகரித்த ஹிஸ்புல்லாஹ்வை நோக்கி வாய்திறப்பார்களா?

சம்மேளனத்தில் உறுப்புரிமையில் இருப்பதாகக்கூறிகொள்கின்ற இந்த அரைவேக்காடுகள் தம்முடைய நிறுவனத்தின் ஊடாகவேனும் ஹிஸ்புல்லாஹ்வை அழைத்து விசாரித்து அநியாயமாக அபகரித்த கோயில் காணியை உரிய தரப்பாரிடம் திருப்பி ஒப்படைத்து மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட முன்வருவார்களா?

மத நல்லிணக்கம் என்று இஸ்லாமிய சமூகத்தை காட்டிக்கொடுத்து மாற்றுசமய மக்களை ஏமாற்றிவருகின்ற காத்தான்குடியைச் சேர்ந்த  ஒட்டுமொத்த நயவஞ்சகப்பேர்வழிகளுக்கும் இது ஒரு பகிரங்க சவால்.

உங்களில் ஒருவருக்கேனும் தைரியமிருந்தால், நெஞ்சில் துணிவிருந்தால், உங்களைப்படைத்த இறைவன் மீது முறையான நம்பிக்கையும் அச்சமும் இருந்தால், தூய இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகின்ற கலப்படமற்ற உண்மை முஸ்லிம்களாக நீங்கள் இருந்தால், நீங்கள் கூறுகின்ற மத நல்லிணக்கம் என்ற வார்த்தை சத்தியமும் சாத்தியமுமானதாக இருந்தால் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை முறைகேடாகப்பயன்படுத்தி அபகரித்த ஓட்டமாவடியில் இந்து சமய வழிபாட்டுத்தலம் அமைந்திருந்த, இந்துசமய மக்களுடைய பூர்வீகக்காணியை அந்த மக்களுக்கே உங்களால் திருப்பி ஒப்படைக்க முடியுமா?

நீங்கள் திருப்பி ஒப்படைக்கவேண்டாம், இன்று மௌலவி ஸஹ்றான் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக சமூகவலைத்தளங்களில் ஊளையிட்டு ஒப்பாரி வைக்கிறீர்களே, அதேபோன்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை விழித்து “அந்தக்காணியை இந்து சமய மக்களிடம் திருப்பி ஒப்படைத்துவிட்டு எங்களுடைய மத நல்லிணக்கத்திற்கு வழிகோலுங்கள்” என்று உங்களால் ஒரு பகிரங்க அறிகையைத்தானும் விடமுடியுமா?

இதற்கு உங்களுக்கு முதுகெலும்பிருக்கிறதா? நெஞ்சில் துணிவிருக்கிறதா? இறை நம்பிக்கையில் உறுதி இருக்கிறதா? உங்களுடைய மத நல்லிணக்க சித்தாந்தத்தில் உங்களுக்கு நேர்மைத்தன்மை இருக்கிறதா? தெம்பும் திராணியுமுள்ள ஆண்மக்கள்தான் நாங்கள் என்று நீங்கள் நினைத்தால் செய்துகாட்டுங்கள். என்னுடைய மரணம் வரைக்கும் உங்களுக்கு நான் அவகாசம் தருகிறேன்.

ஆனால் நீங்கள் ஒருபோதும் செய்யமாட்டீர்கள். காரணம் அந்த ஹிஸ்புல்லாஹ்வின் தலையாட்டி பொம்மைகள்தான் நீங்கள். கோயில்களில் குத்து விளக்கேற்றுவதும் தலையில் வெள்ளை நிறத்தொப்பியும் வைத்து தோளில் மஞ்சள் நிறச்சால்வையும் போர்த்திக்கொண்டு சாமியார்களின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்குவதும், தைப்பொங்கலுக்கும் நத்தாருக்கும் வாழ்த்து கூறுவதும் மத நல்லிணக்கம் என்னும் போர்வையில் இஸ்லாத்தின் தனித்துவத்தையே கரைத்து காணாமல் போவதும்தான் உங்களுக்கு தெரிந்த மத நல்லிணக்கம். ஏனெனில் நீங்கள் மத நல்லிணக்கம் என்னும் பெயரால் உங்களையும் ஏமாற்றி, இந்த இஸ்லாமிய சமூகத்தையும் காட்டிகொடுத்து, பிறசமய மக்களையும் எமாற்றிவருகின்ற கள்ளப்பேர்வழிகள்.

பிறசமய மக்களுடைய வழிபாட்டுத்தலத்திற்கு சொந்தமான காணியை கள்ளத்தனமான முறையில் அபகரித்துக்கொண்டு அந்த மக்களுடனேயே நல்லிணக்கம் என்னும் பெயரால் நடித்து வருகிறீர்களே இதை விடவா இந்த உலகத்தில் ஒரு நயவஞ்சகத்தனம் இருக்கப்போகிறது?

இதிலிருந்தே நீங்கள் கூச்சலிடுகின்ற மத நல்லிணக்கம் என்பது ஒரு நயவஞ்சகத்தனமான வெற்றுக்கோஷம்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

மத நல்லிணக்கம் என்னும் பெயரால் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதை பிரச்சாரம் செய்யும் அறிஞர்களையும் உங்களுடைய உள்ளங்களில் குடிகொண்டுள்ள குரோதத்தின் காரணமாக காட்டிகொடுக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்கிறீர்களா?

எனவே இந்த போலியான, நயவஞ்சகத்தனமான மத நல்லிணக்கத்தைத்தான் நாங்கள் கூடாதென்கிறோம். அந்த மக்களிடம் இருந்து அநியாயமாக அபகரித்த காணியை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு வாருங்கள், நாங்களும் உங்களுடன் இணைந்து மாற்றுமத மக்களுடன் செயற்பாட்டுரீதியான நல்லிணக்கத்தை பேணுகிறோம்.

தனக்கு உரிமையில்லாத இன்னொரு நபருடைய காணியில் ஒரு சாண் நிலத்தை அபகரித்தாலும் அது நாளை மறுமையில் அழ்ழாஹ் ஏழு பூமிகளை நமது கழுத்தில் தொங்கவிட்டு வேதனை செய்வான் என்று இஸ்லாம் சொல்கிறது. நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் அழ்ழாஹ்வின் இந்த தண்டனையை பயந்துகொள்ளுங்கள்.


நீங்கள் மங்கள விளக்கேற்றத்தேவையுமில்லை, மஞ்சள் சால்வை அணியத்தேவையுமில்லை. இஸ்லாமிய மார்க்கத்தை உங்களுடைய வாழ்நாளில் அதன் தூய வடிவில் பின்பற்றினால் மாற்றுசமய மக்களிடத்தில் நீங்கள் நல்லெண்ணத்தை பெற்றுக்கொள்வதற்கு அதுவே போதுமானது என்பதை இறுதி உபதேசமாக கூறிக்கொள்கிறேன்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :