Featured Home (TOP)

Recent Comments

Monday, April 27, 2015

Unknown

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை தொடர்பில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் விஷேட அறிக்கை.

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை தொடர்பில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் வெளியிட்டுள்ளவிஷேட அறிக்கை எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



Read More
Unknown

மறைந்த மாபெரும் கல்வியலாளர் ஜெமீல் பற்றிய குறிப்பு ..


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும், பிரபல கல்வியியளாலருமான அல்ஹாஜ்S.H.M.ஜெமீல் அவர்கள் தனது 75 ஆம் வயதில் இன்று காலை (27.04.2015)தெஹிவளையில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்ஹாஜ்.சாகுல் ஹமீத் முஹம்மத் ஜெமீல் தென் கிழக்கிலுள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரபல்யமான குடும்பமொன்றான முத்தலிபு வைத்தியர் குடும்பத்தில் 1940ம் ஆண்டு பிறந்தார்.
Read More
Unknown

கல்விமானை கௌரவிக்கும் சிறப்புமிக்க நிகழ்வு காத்தான்குடி சம்மேளனத்தில் இடம் பெற்றது



(ஏ.எல்.டீன்பைரூஸ்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கல்விமான் எம்.ஜ.சேகுஅலி(SLEAS)அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அன்மையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனத்தில் தலைவர் எம்.ஜ.எம். சுபைர் jp(Rt-cc) தலைமையில் நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவர்,செயலாளர்,சம்மேளன கல்விக்குழுவின் செயலாளர் எஸ்.எல்.ஏ.கபூர் Bcom ,சம்மேளன உறுப்பினர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர்கள்,உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சம்மௌனத்தின் தலைவர் எம்.ஜ.எம்.சுபைர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம்அஷ்ய்ஹ் ஏ.எல்.எம்.சபீல்(நழீமி)   அவர்களினால் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனமும் அதன் கல்விக்குழுவும் ஆற்றிவரும் மகத்தான பணிகள் தொடர்பாகவும்  மிகவும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் பெசினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளரின் பூரன ஒத்துழைப்புடன் எதிர்காலத்தின் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான சில வடயங்களை  அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல்(நழீமி) சுட்டிக்காட்டினார்.
Read More
Unknown

அறிவியல் மற்றும் இலக்கிய உலகிற்கு ஜெமீலின் இழப்பு பாரிய இடைவெளியாகும்-காத்தான்குடி ஊடக ஒன்றியம் அனுதாபம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மூத்த கல்விமானும், இலக்கிய ஆளுமையும் இலங்கையின் சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீலின் இழப்பு அறிவியல் மற்றும் இலக்கிய உலகிற்கு நிரப்ப முடியாத இடைவெளியை உண்டு பண்ணியுள்ளது என காத்தான்குடி ஊடக ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஓன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் பொதுச் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள இவ் அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ... 
Read More
Unknown

மஹிந்த தலைமையில் புதிய அரசியல்கட்சி ஆரம்பம்: 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

பொதுத் தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்படாவிட்டால், அவர் வேறு கட்சியில் நிச்சயம் போட்டியிடுவார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு மஹிந்தவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
Read More
Unknown

பிரதான கட்சிகளி்ன் மேதினக் கூட்டங்கள் கொழும்பில்

பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு திருகோணமலையில் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை இரண்டாகப் பிரிந்து மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்தவுள்ளமை விசேட அம்சமாகும். 11 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டதிலிருந்து இம்முறையே இரண்டாகப் பிரிந்து மேதினக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
Read More
Unknown

சிலை வணக்கத்திற்கான ஆரம்பம் நினைவுச் சின்னங்களாக அவற்றை நிறுவுவதுதான்! காத்தான்குடியில் தமிழக மார்க்க அறிஞர் கோவை எஸ். ஐயூப் தெரிவிப்பு

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைதான் உருவச்சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைப்பதாகும். இவ்வாறுதான் உலகில் சிலை வணக்க வழிபாடு தோன்றியது என அல்குர்ஆனும் எடுத்தியம்புகின்றது. 

எனவே காத்தான்குடியிலும் இன்று நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டுள்ள உருவச்சலைகள் பின்னொரு காலத்தில் வணங்கப்படத்தக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரும் இங்கு வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரான கோவை எஸ். ஐயூப் தெரிவித்தார்
Read More