பொதுத் தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்படாவிட்டால், அவர் வேறு கட்சியில் நிச்சயம் போட்டியிடுவார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு மஹிந்தவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.