Featured Home (TOP)

Recent Comments

Monday, May 11, 2015

Unknown

காத்தான்குடி நகரசபையின் ஆதன வரி அதிகரிப்பு தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் விடுக்கும் அறிவித்தல்.


இவ்வாண்டுக்கான (2015) ஆதன வரிகள் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காணிகள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்களுக்கு திடீரென 4 தொடக்கம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டமையானது மக்களுக்கு ஒர் பாரிய வரிச்சுமையாக காணப்படுகின்றது.

வரிகள் திடீரென பன்மடங்காக அதிகரிக்கப்பட்டதனால் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களும், அன்றாடம் பிழைப்பு நடாத்தி தமது சீவியத்தை கொண்டு செல்லும் மக்களும், சிறியசிறிய வியாபாரங்களில் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களும், மற்றும் அணைத்து தரப்பினரும் மிக பாரிய அசௌகரியத்தினை முகம் கொடுத்து வருகின்றனர் என்பதை அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் இந்த விடயத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஸீர் ஹாபீஸ் அவர்களின் கவனத்திற்கு கடந்த 11.02.2015 அன்று கடிதம் மூலம் இவ் வரி அதிகரிப்பு அறவீட்டினை நிறுத்துமாறு ஆணித்தரமாக வேண்டுகோளை விடுத்திருந்தார்.
Read More
Unknown

தேர்தல் சீர்திருத்தம் குறித்து இணக்கம் இல்லாவிட்டால் பாராளுமன்றம் கலைப்பு: மைத்திரி


தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பில் கட்சிகளிடையே பொது இணக்­கப்­பாடு காணமுடி­யா­விட்டால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் ­தேர்­தலை நடத்­து­வ­தற்­கான இறுதித் தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுத்­துள்ளார் என்று ஜே.வி.பி. தெரி­வித்­தது.
தேர்தல் சீர்திருத்தம் குறித்து இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருக்கின்றது. இதனையடுத்து நாளை மறுதினம் 13 ஆம் திகதி தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான யோச­னைகள் அமைச்­ச­ர­வைக்கு முன்­வைக்­கப்­ப­டு­மென்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.
Read More
Unknown

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு..!

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு 8ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகதமையால் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற வழக்கில் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

வெளிநாட்டிற்கு சென்றுள்ள பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடு திரும்பியதும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது  செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

- Virakesary


Read More
Unknown

பௌசியின் மகனை கைது செய்ய உத்தரவு

கடந்த 2012 ஆம் ஆண்டு  கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனான நௌசர் பௌசியை கைதுசெய்ய கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
Read More
Unknown

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது

எரி­பொ­ருட்­களின் விலைகள் அதி­க­ரிக்­க­போ­வ­தாக மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக மின்­வலு மற்றும் எரி­சக்தி அமைச்சு தெரிவித்­துள்­ளது.
அதே­நேரம் நாட்டில் எரி­பொ­ருட்­க­ளுக்கு தட்­டுப்­பாடு நில­வுவ­தாக தெரிவிக்­கப்­ப­டு­வதில் எவ்­வித உண்­மையும் இல்லை எனவும் சுட்­டிக்­காட்­டி­யது.

இதுதொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது,
புதிய அரசின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எரி­பொ­ருட்­களின் விலைகள் குறைத்­த­தை­ய­டுத்து தொடர்ச்­சி­யாக இலங்கை பெற்­றோ­லிய கூட்­டு­தா­ப­னத்­திற்கு நட்டம் ஏற்­பட்­டுள்­ள­தனாலும் எரி­பொ­ருட்­க­ளுக்­கான கேள்வி அதி­க­ரிப்­ப­தற்கு சாத்­தி­ய­கூ­றுகள் இருப்­ப­தனாலும் அவற்றின் விலைகள் அதி­க­ரிக்கப் போவ­தாக தகவல்கள் வெளியா­கி­யி­ருந்­தன.
Read More
Unknown

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த ­பாய ராஜ­ப­க் ஷ­விடம் இன்று விசாரணை

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த ­பாய ராஜ­ப­க் ஷ­விடம் நிதிக் குற்றப் புல­னாய் வுப் பிரி­வினர் இன்று விஷேட விசா­ர­ணை­யொன்றை நடத்­த­வுள்­ளனர். இன்று காலை 10.00 மணிக்கு இது தொடர்பில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு கடிதம் மூலம் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.
மிக் விமான கொள்­வ­னவு மற்றும் லங்கா ஹொஸ்­பிடல்ஸ் பங்கு விற்­பனை ஆகிய விவ­கா­ரங்­களின் போது நிகழ்ந்­த­தாக கூறப்­படும் நிதி மோசடி தொடர்­பி­லேயே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.
Read More
Unknown

ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திற்கு தெரிவான காத்தான்குடி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(-எம்.எச்.எம்.அன்வர்-)

மிகப்பெரும் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி பல கல்விமான்களையும் பல அறிஞர்களையும் உருவாக்கி முஸ்லிம் சமூகத்திற்கே பெருமை தேடித்தந்த ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திற்கு இம்முறை தெரிவான காத்தான்குடி மாணவர்கள் இருவரையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்றது
Read More
Unknown

கோறளைப்பற்று மேற்கு இக்பால் இளைஞர் கழகத்தின் 'நல்ல நூற்கள் நல்ல நண்பர்கள்' எனும் விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் இக்பால் இளைஞர் கழகத்தின் கல்வி பிரிவின் இவ்வாண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் 'நல்ல நூற்கள் நல்ல நண்பர்கள்' எனும் விஷேட செயற்றிட்டத்திற்கமைவாக இலங்கை அபிவிருத்திக்கான   ஊடகவியலாளர்கள் மன்றம்  வெளியீட்ட'வாழ்வது நம் கையில்' எனும் நூற்தொகுதிகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது நூலகங்களுக்கு வழங்கும் நடவடிக்கை கழகத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
Read More