அங்கம் 04
இப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்படவிருந்த வேளையில் மெத்தைப்பள்ளிவாயலில் பேஷ் இமாமாக இருந்தபோது, அப்பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்கள் தனவந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கத்முல் குர்ஆன் ஓதித் தமாம் செய்த வகையில் அவர்களுக்கு
வழங்கப்பட்ட பணத்தொகைகளை
வீட்டுக்கு வெளியே வந்ததும் முழுவதுமாகப் பறித்துக்
கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, உள்ளுர் பத்திரிகையிலும் பல வாரங்களாக
நீடித்து வந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு பதவியிறக்கப்பட்டவரும், ஜம்இய்யாவின் நிர்வாக சபை உறுப்பினருமான மௌலவி ஏ.எம். காலித் ஹஸன் (பலாஹி), காத்தான்குடி
மத்திய கல்லூரி ஆசிரியரும், ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவருமான மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி), முன்னாள் நகர சபை உறுப்பினரும், ஜம்இய்யாவின்
நிர்வாக சபை உறுப்பினருமான மௌலவி எம்.ஐ.எம். முபாறக் (பலாஹி) போன்றவர்களும் அந்தப் பிரேரணைக்கு எதிராகத் துள்ளிக்குதித்து, போர்க்கோலம் கொண்டு, சபைக்கு மத்தியில் நின்று தாண்டவமாடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த அமளியின் காரணமாக ஜனநாயக வழியில் இப்பிரேரணை
மீதான வாக்கெடுப்புக்கூட அங்கு நடைபெறாது
கண்ணியமிக்க உலமாக்கள்
ஆளுக்கொரு பக்கமாகக்
கலைந்து சென்றதாகவும்
தகவல் கிடைத்தது.
இந்தக் களேபரத்தினால்
எமது கடிதம் அன்றையக் கூட்டத்தில் பரிசீலனைக்கு
எடுக்கப்படவில்லை. எமக்கொரு முடிவை அறிவிக்கவுமில்லை.
இவ்விடத்தில் இந்த காலித் ஹஸன் மௌலவியைப் பற்றியும்
நாம் சிறிது குறிப்பிட வேண்டும்.
2011ம் ஆண்டு நகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில்
நாம் ‘போர்வாள்’ சின்னம் ஏந்தி எதிர்த்து
நின்ற நவக்கிரக டே;பாளர்களுக்கு ஆதரவாக இவர் மெத்தைப்பள்ளிவாசல் மிம்பரில்
நின்றுகொண்டு ஜும்ஆப்பிரசங்கம் செய்த இறையச்சமில்லாதவர்.