(இப்னு மஹ்மூத்)
நெஞ்சைக் கனக்கச்
செய்த ஒரு காட்சியின் பின் எழுதத் தோன்றியது
இரவு சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சடன நிகழ்ச்சியில் ஒரு பொது பல
சேனாவின் காவி நாகம் கடுமையான இனத்துவேச விஷத்தை முஸ்லிம்கள் மீது கக்கியது, இந்த
நாட்டில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் மாத்திரம் தான் காணிப் பிரச்சினை
இருக்கிறது முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினை கிடையாது ( நமது மண்ணின் மைந்தனின் பத்திரிகை அறிக்கை போல
) மாறாக அவர்கள் இந்த இரு இனங்களின் காணிகளையும் பொருளாதரத்தையும்
சூறையாடியுள்ளனர் என இடித்துரைத்தது.
பொது அணி கொண்டுவந்த நல்லாட்சி மாற்றம் ஒரு சிறிய மன அமைதியை முஸ்லிம்
மக்களுக்கு கொண்டுவந்தாலும் எம்மீது சூழ்ந்துள்ள இனவெறி ஆதிக்க ஆபத்து இன்னும்
நமது சமுகத்தை விட்டு அகலவில்லை. நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது, மகிந்தவின்
அணி பலமுறச் செய்யப்பட்டால் அந்த நெருப்பு இந்நாட்டில் நாம் வாழும் அத்தனை மூலை முடுக்குகளையும்
சூழ்ந்து முஸ்லிம்களை சுட்டெரிக்கும்.
ஆட்சியில் இருந்து துரத்தப் பட்ட போதும் கூட ஒரு ஜனாதிபதியின் அதிகாரத்தினையும்
மீறி, பிரதமருக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்
போட்ட, ஒரு வேட்பளராக களமிறங்கிய, தேர்தல் செயற்பாடுகளின் செயற்பாடுகளின் நாயகனாக பரிணமிக்க முடிந்த
மகிந்தவுக்கு பாராளுமன்றத்துக்குள் வந்துவிட்டால், அவரிடம் இருக்கும் பண பலத்தால்
பல எம்பிக்களை விலைக்கு வாங்கி இந்த நாட்டின் நல்லாட்சி அரசியல் செயற்பாடுகளைக்
குழப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு
இருக்கிறது என்பதை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது
அன்பின் சகோதரர்களே! எந்த தனிமனிதன் மீதான அதீத காதலும் நமது இனத்திற்கு
எதிராக, எதிர்கால சந்ததிகளுக்கு எதிராக, நமது வணக்கஸ்தலங்களுக்கு எதராக, நமது
சன்மார்க்க விழுமியங்களுக்கு எதிராக உங்களை வாக்களிக்க தூண்ட வேண்டாம்!
இது நீங்கள் அறிந்துகொண்டே செய்யும் பெரும் பாவமாகும், சிறுபான்மை மக்கள்தான்
என்னை தோற்கடித்தார்கள் அதற்காக பழிவாங்குவேன் என மஹிந்த சூளுரைத்ததை மறந்து விட
வேண்டாம்!
என்னருமை சமூகமே! உன் எதிர்கால இருப்பும், தன்மானமும், சுதந்திரமும்,
இஸ்லாமியனாக வாழ்வதும் நீ அளிக்கப் போகும் வாக்கில்தான் தங்கியிருக்கிறது!
சமுகத்தின் நல்வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமையை வாக்குச் சீட்டுகளாக உன்
கையில் தரப்பட்டிருக்கிறது!
இம்முறையாவது ஏமாற்றுக்கும், பணத்தின் விளையாட்டுக்கும், அன்பளிப்பாக
கொடுக்கப் படும் அற்ப கோப்பைகளுக்கும், சோத்துப் பொதிகளுக்கும் போலியான நாடகங்களுக்கும் அடிமையாகி விடாது சமுகத்திற்காக,
உங்கள் குழந்தைகளுக்காக, நமது அமைதியான எதிர்காலத்திற்காக ஒரு கணமேனும் சிந்தித்தீர்க்களென்றால்
உங்கள் கரங்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்காது
சிந்திப்பீர்களா??????????????????
போதிமர நாகம் வெற்றிலையின் பின்னால் எம்மை பொறிவைத்துக் காத்திருக்கிறது கவனம்
மக்காள்!